Monday 24 October 2016

முதல் புரவலர்



நமது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்துவதற்காக ஏற்கனவே சில நலம்விரும்பிகளும் நண்பர்களும் எனக்கு அவ்வப்போது உதவிசெய்திருக்கின்றனர். அவர்களை இச்சங்கமத்தின் புரவலர்களாகத்தான் நான் நினைத்து வருகிறேன்.
இருப்பினும் இந்த சங்கமத்தை நடத்துவதற்கு என்றும் அதற்காக புத்தகங்களை பதிப்பிக்கிறேன் என்றும் சொல்லி மற்றவர்களிடம் உதவி கேட்பது இதுதான் முதல் முறை.
முகநூலில் இந்த வேண்டுகோளை வைத்தேனே தவிர நேரடியாக யாரிடமும் இன்னும் கேட்கவில்லை. காரணம், வழக்கமாக என்னிடம் உள்ள தயக்கமும் கூச்சமும்தான். அதுவுமின்றி என்னுடைய படவேலைகளை ஆரம்பிப்பதற்கு இது தடையாகி மாறிவிடுமா என்ற குழப்பமும் இருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று (சனிக்கிழமை) டிஸ்கவரியில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன். அங்கு வந்திருந்த கீதாஞ்சலி பிரியதர்சினி அம்மா அவர்கள் என்னுடைய முகநூல் வேண்டுகோளை பார்த்ததாக குறிப்பிட்டு திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலைஎனும் புத்தகத்தை பதிப்பிக்க உதவியாக இருக்கட்டும் என்று ஒரு தொகையை தந்தார். தொகை சிறியதா பெரியதா என்பது இங்கே முக்கியமல்ல. இந்த தொகை தான் என்னுடைய தனிப்பட்ட நட்பு வட்டத்தைத் தாண்டிய ஒருவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் முதல் அன்பளிப்பு!
ஆகையால் இவர்தான் உண்மையில் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் புரவலர்!
இவருடைய இந்த அன்பளிப்பால் இன்று நான் மிகவும் உற்சாகமாகி, தயக்கங்களையும் குழப்பங்களையும் விட்டுவிட்டு என்னுடைய படவேலைகளுக்கு இணையாக இந்த சங்கமத்தின் வேலைகளையும் தொடர்ந்து செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

இந்த உற்சாகத்தைத் தந்த முதல் புரவலர் கீதாஞ்சலி அம்மாவுக்கு நன்றிகள்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post