Saturday 19 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் - 5



முடிவுரைகீதம் - ஜென்னிக்கு

உன்னிடம் சொல்கிறேன் செல்லமே,
இன்னுமொரு விஷயம், ஆனந்தமாம்
இந்த விடைபெறும் கவிதையும்
பாடி நான் விடைபெறுகிறேன்,
கடைசியிலிந்த வெள்ளியலைகள்
துடித்துருண்டு சேரும்நேரம்,
அதன் ராகத்தில் என் ஜென்னியின் சங்கீதம்,
உள்கடலின்மேலேயென்பதுபோல
வேகத்தில்பாய்ந்தும், விழும்போது
மங்கியபடியும், சிற்றருவியை,
காட்டுத்தலங்களை கடந்துவரும் இந்த
வாழ்வின் வேகயாமங்களுக்கும் அவசரமாம்,
உன்னில் முழுமையின் எல்லையை
கண்டுபிடிக்கும்வரை! உலர்ந்துவிழும்
அக்னியாடை வீரமாமென் உடலில் அணிவிக்கிறது, ஒளிமாற்றமாகும் இதயத்தடம் கவுரமானசிகரம்,
பந்தத்தை அறுத்தல்!
ஆகாயங்களில் தடையின்றி பயணிப்பேன் நான்!
வலிகள் சிதறியது உன் முக பிரசாதத்தால்,
வாழ்க்கைத்தோழியின் நேராக

என்கனவுகள் ஜொலிக்கிறது!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post