Tuesday 30 May 2017

பட்டுக்கோட்டை பிரபாகரின் இருநூல்கள் அறிமுகம்





கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-5-2017) திரு பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய இரண்டு நூல்களின் அறிமுகக் கூட்டம் டிஸ்கவரி புக் பேலசில் நடைபெற்றது. அதில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி!
எதிர்பாராத விதமாகத்தான் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கும்படி வேடியப்பன் என்னிடம் சொன்னார். விருந்தினர்கள் பற்றிய போதிய விபரங்களை குறிப்பெடுக்கவோ, அறிமுகப்படுத்தும் நூல்களை படித்துப்பார்க்கவோ நேரம் கிடைக்கவில்லை. இருந்தும் ஏதோ சமாளித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
இருப்பினும் நான் தொகுத்துவழங்கியதை பலரும் நேரிலேயே பாராட்டினார்கள். என்னுடைய திரைப்ப்ட இலக்கியச் சங்கமம்நடத்தும் நிகழ்வுகளை நான் தொகுத்து வழங்குவது வழக்கம். இன்னொரு நிகழ்வில் இப்படி தொகுப்பது இதுவே முதல் முறை. இதற்கெல்லாம் காரணமாக, எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த வேடியப்பனுக்கு நன்றி!
நிகழ்வில் பட்டுக்கோட்டை பிரபாகரின் கடவுள் கனவில் வந்தாராஎன்ற சிறுகதைத் தொகுப்பும் எப்படி இப்படிஎன்ற கட்;டுரைத் தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டன.
சிறுகதைத் தொகுப்பு பற்றி முதலில் திரைப்பட இணை இயக்குநர் மிர்திகா சந்தோஷினி பேசினார். தொகுப்பில் இருக்கும் 20 கதைகளையும் அலசி, அராய்ந்து, ஒவ்வொரு கதையிலும் ஒரு அவதாரத்தின் இருப்பை கண்டுபிடித்து எடுத்துச் சொன்னார். உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது.
அனைத்து கதைகளைப்பற்றியும் இவர் பேசியதால் பிறகு இந்த தொகுப்பு பற்றி பேசவந்த இயக்குநர்கள் பத்ரி அவர்களும், .வெங்கடேஷ் அவர்களும் சற்று தடுமாறிவிட்டனர் என்பது நிஜம். (நல்ல வேளை இந்த தொகுப்பில் நாற்பது கதைகள் இருந்திருந்தால் தொகுத்து வழங்கிய நானும் தடுமாறியிருப்பேன். இடையில் பேச்சை நிறுத்தும்படி துண்டுசீட்டு எழுதிகொடுக்க வேண்டியிருந்திருக்கும்!)
அடுத்ததாக கட்டுரைத் தொகுப்பு பற்றி இயக்குநர் கேபிள் சங்கர் பேசினார். தொகுப்பிலிருந்து கட்டுரைகள் ஏற்கனவே பல ஆங்கில தொடர்களுக்கு களமானதை விளக்கினார். ஆனால் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே பேசியதுபோல எனக்கு தோன்றியது. (எனக்குமட்டும்தானா என்று எனக்கு தெரியவில்லை.)
பிறகு இயக்குநர் பத்ரி சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசினார். முதல் பத்து கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பேசி, மற்ற பத்து கதைகளை .வெங்கடேஷ் அவர்களுக்காக விட்டுவைத்தார். அதற்கு அவருக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்லியாகவேண்டும். அவருடைய பேச்சு மிகவும் இலக்கியத்தரமாகவும் கலகலப்பாகவும் இருந்தது. இனிமேல் பல இலக்கியக்கூட்டங்களில் இவருடைய பேச்சு இடம்பெறும் என்று எனக்கு தோன்றுகிறது!
தொடர்ந்து, கட்டுரைத்தொகுப்பு பற்றி இளங்கோவன் கீதா அவர்கள் பேசினார். ரெயில்வேத் துறை அதிகாரி என்பதாலேயே என்னமோ, பாசஞ்சர் போல ஆரம்பித்து, எக்ஸ்பிரஸ் போல பயணித்து, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போல சொல்லவந்த கருத்துக்களை வாசகர்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே கொண்டுசேர்த்தார். கிரைம் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய பொதுவான கண்ணோட்டத்தையே மாற்றியமைப்பதாக இருந்தது அவருடைய பேச்சு!
அதைத் தொடர்ந்து இயக்குநர் .வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு பற்றி பேசினார். அவருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் உள்ள நட்புபற்றியும், அதற்காகவே இந்த கூட்டத்துக்கு தானாகவே வந்ததாகவும் சொன்னார். சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அழகாக எடுத்துரைத்தார்.
நிறைவாக பட்டுக்கோட்டை பிரபாகர் ஏற்புரை நிகழ்த்தினார். தன்னுடைய எழுத்து பற்றியும், இந்த இரு நூல்கள் எழுதிய பின்னணி பற்றியும், விருந்தினர்கள் எடுத்துரைத்த கேள்விகள் பற்றியும் தெளிவாக பேசினார். நிறைவு பேச்சு நிறைவாகவே இருந்தது
நிகழ்வின் ஆரம்பத்தில், வரவேற்புரையில் நண்பர் வேடியப்பன் டிஸ்கவரியில் வழக்கமான இலக்கியக் கூட்டத்துக்கு வரும் நண்பர்கள் இந்த கூட்டத்துக்கு வரவில்லை என வருத்தம் தெரிவித்தார். இதையே பின்பற்றிக்கொண்டு நான் வெகுஜனஇலக்கியம் பற்றி குறிப்பிட்டு பேசினேன். நான் நினைத்தபடியே அதன்பிறகு நிகழ்வில் பேசிய அனைவரும் இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசினார்கள். (நம்மால் முடிந்தது இப்படி பேசவைப்பதுதானே!)
திரைப்பட இலக்கியச் சங்கமத்தில் நான் மேற்கொள்ளும் நிகழ்வுகளிலும் இதைத்தான் வலியுறுத்தி வருகிறேன். தீவிர இலக்கியம்என்றும் வெகுஜன இலக்கியம்என்றும் பிரிக்கத் தேவையில்லை, சினிமாவை ஆர்ட்என்றும் கமர்ஷியல்என்றும் பிரிக்கத் தேவையில்லை என்பது தான் என்னுடைய வாதம்.
இந்த நிகழ்விலும் அந்த எண்ணம் மேலோங்கியதால், என்னுடைய நிகழ்வில் இருந்ததுபோலவே ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்பட்டது. இதை உருவாக்கிய அனைத்து விருந்தினர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள்..



Saturday 27 May 2017

Cine Artists Circle – the beginning





Dear friends,

I am very proud to announce that our Film Literature Confluence, which had been started with the thoughts like ‘the film and literature fields should be united together and a friendship circle among film fraternity should be created’, has been conducting successfully for more than six years continuously!

Now, our confluence is going forward with many more thoughts like ‘should find solution for some problems in the film field, should guide for alternate views in film field, a few basic changes should be brought as everyone working in the film field will be benefitted’. 

‘Cine Artits Circle’ has been commenced as a first step toward those objectives, for all in the film industry, who are searching for chance, searching for success, loving the films and making films.

Objecitves

All the artists (Actors, Writers, Directors, Technicians, Producers and Fans) should be united inside a friendship circle!
The names and contact numbers of everyone should be added to a network(Film Literature Directory)!
A platform should be made for meeting one another in a function every week and in a festival every month!
A path should be made to enjoy the films, to understand, to learn. to practice. and to share!
Good films and talented persons should be selected, praised, help and motivated!

Procedure
Make film teams (Actors, Writers, Directors, Technicians and Producers)from the Artists Circle !
Help them to take short films or feature films and co-ordinate all of them!
Select good ones from the short films and feature films released newly, analyze, praise the creators and review the creations!   
Understand and share whatever happens in and whatever needed for the industry!
For that, conduct seminars, workshops, short film analysis meet and film analysis meets!

I am inviting the friends in the film and literature world to join this friendship circle..
Let us join together.. win together..


Kamalabala B.Vijayan 

Ponniyin Selvan – the beginning



The film ‘Bahubali 1 and 2’ made in Telugu by Rajamouli totally shaken the Indian film field. Now, nobody can avoid comparing to these films when refer any big budget film. Many creators and producers started to take big budget films following the success of Bahubali.

There is news that ‘Randamoozham (Mahabaharatham)’ with Mohanlal as lead actor is going to be made in Malayalam in 1000 crore budget. The ‘Sangamithra had been started in Tamil. ‘Enthiran 2.0’ is going to be released soon. If it become hit, the number of big budget films will be increased more.

When talking about the big budget films like this, always a name will be rised in the minds of Tamil fans, that is the ‘Ponniyin Selvan’. The question rising as ‘Why this subject is not made in a grandeur manner?’ is usual.


This attempt is the answer for that question. This decision is not taken in a single day.. This is a plan derived from the thoughts of many years. This is the compulsion of the time. More details about this will be in the next posts…

திரைக் கலைஞர்கள் வட்டம் - ஆரம்பம்



அன்புடையீர்,

திரைப்படத் துறையையும் இலக்கியத்துறையையும் இணைக்க வேண்டும், திரைப்படத் துறையில் ஒரு நட்புவட்டத்தை வளர்க்கவேண்டும்என்பது போன்ற எண்ணங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நமது திரைப்பட இலக்கியச் சங்கமம் தொடர்ந்து ஆறு ஆண்டுகளைத்தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது!

தற்பொழுது, திரைத்துறையில் பணியாற்றும் அனைவரும் பயன்பெறும் விதமாக, இத்துறையில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய, மேலும் பல எண்ணங்களுடன் நமது சங்கமம் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.    
அந்த இலக்குகளை எட்டுவதன் முதல்படியாக திரைத் துறையில் வாய்ப்பைத் தேடுபவர்களுக்காகவும், வெற்றியைத் தேடுபவர்களுக்காகவும், சினிமாவை ரசிப்பவர்களுக்காகவும், சினிமாவை எடுப்பவர்களுக்காகவும் திரைக் கலைஞர்கள் வட்டம்’  (CINE ARTISTS CIRCLE) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலக்குகள்

அனைத்து கலைஞர்களையும் (நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள்) ஒரு நட்பு வட்டத்திற்குள் இணைக்க வேண்டும்!
அனைவரது பெயர் மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் (திரைப்பட இலக்கியப் பெயர்காட்டி) சேர்க்க வேண்டும்!
வாரம் ஒரு சந்திப்பு, மாதம் ஒரு விழா என ஒருவரையொருவர் சந்திப்பதற்கான களம் அமைக்க வேண்டும்!
ஒன்றிணைந்து திரைப்படத்தை ரசிக்க, அறிந்துகொள்ள, கற்றுக்கொள்ள, பயிற்சியெடுக்க, பகிர்ந்துகொள்ள, வெற்றிபெற வழி வகுக்க வேண்டும்!
நல்ல படங்களையும், நல்ல திறமையாளர்களையும் தேர்ந்தெடுத்து பாராட்ட, உதவிசெய்ய மற்றும் ஊக்குவிக்க வேண்டும்!

செயல்கள்

கலைஞர்கள் வட்டத்தில் இருந்த படக்குழுக்களை (நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்) உருவாக்குவது!
அவர்கள் குறும்படங்களை அல்லது திரைப்படங்களை எடுக்க உதவி செய்வது, அனைவரையும் ஒருங்கிணைப்பது!
புதியதாக வெளிவரும் படங்கள் மற்றும் குறும்படங்களில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து, ஆராய்ந்து, அவற்றின் பாடைப்பாளிகளை பாராட்டுவது மற்றும் படைப்புகளை விமர்சிப்பது!
திரைத்துறையில் நடப்பவற்றையும், திரைத்துறைக்கு தேவையானவற்றையும் அறிந்துகொள்வது மற்றும் பகிர்ந்துகொள்வது!
அதற்காக தொடர்ந்து கருத்தரங்கம், பயிலரங்கம், குறும்பட ஆய்வரங்கம் மற்றும் திரைப்பட ஆய்வரங்கம் நடத்துவது!

திரைப்பட. இலக்கிய உலக நண்பர்களே. இந்த
நட்பு வட்டத்தில் இணைந்திடுங்கள்
அனைவரும் ஒன்றுகூடுவோம்
ஒவ்வொருவரும் வெற்றிபெறுவோம்


கமலபாலா பா.விஜயன்