Friday 25 September 2015

Coming soon…


This is one among the happiest moment in my life. I completed the works of three books in Tamil and handed over for publishing. And the final works are going on to print the books.
I hope that the books will be published within a few days. And these books will surely make a change in my life.
Now I can understand how much time wasted in my life so far, and how many things I have to do from now onward.
I really thanks my friend Mr. Vediyappan, who not only encouraged me to write these books, but came forward to publish these books through his ‘Discovery Book Palace.
I request the help and co-operation all the friends to make this attempt a success.




This is the biography of the story teller, Vaikkom Muhammed Basheer, who told stories again and again, and became an immortal story himself in the mind of readers. 
This is a biography compiled on the basis of the notes seen in the creations of Basheer, the books written by his friends, articles published on the occasion of Basheer’s Centenary and notes from some thesis.




This is not a mere document about the life of a section of people in Kerala, that happened in the past or happening in the present. This is the other side of history, of whole India, may be of the all nations in the world, that were mostly not had been written, that didn’t cared by most of the people even had been written.




The writings of Khalil Gibran are very prominent among the creations translated to many languages many times. The content, artistic quality, and linguistic beauty in that creations are being appreciated by all the readers in the world.

This is a collection of mini stories, short stories and stories from his creations.

Saturday 19 September 2015

Njaanodhayam



Unnai arinthaal, nee unnai arinthaal, ulakaththil nee poraadalaam,
 Uyarnthaalum thaazhnthaalum thalai vanangaamal nee vaazhalaam.”
(If you understand yourself, you can fight in this world and you can live, even become rich or poor)
This is a song from an old MGR film. I understood the impact of these words only now!
Till this day, I had worked in many areas of the film field. But, today I decided to stick only to my basic roots, ie, Writing and Script treatment.  
And I decided to continue this work properly and professionally in all the languages I know.
I hope to increase the area of my work and my friendship circle by working with many more directors, technicians, writers and producers.

For this, I request the help and co-operation of all the friends.    

Tuesday 8 September 2015

மோகன்லால் படங்கள் – சிறு குறிப்பு



மோகன்லால் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார், (இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒருமுறை மிகச்சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் குழ விருதும், ஒருமுறை சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த நடிக்கிற்காக ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார். இவர் இந்திய திரைப்பட உலகத்தின்முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் கேணல் பதவியை வழங்கியது. இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவர்தான். தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்காக மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவர்தான்.
மோகன்லால் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார். அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில், ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார். மேலும் கல்லூரியில் படிக்கும்போதும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவருக்கு நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர். அவர்களில் ப்ரியதர்ஷன் ,M.G.ஸ்ரீகுமார், சுரேஷ்குமார் மற்றும் மணியன்பிள்ள ராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் உருவெடுத்தார்கள். அவருடைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்றும் அவருடன் திரைப்படத்துறையில் உள்ளனர்.
மோகன்லால் முதன் முதலில் "திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும்தான் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர்  பாசில் இயக்கத்தில் வெளிவந்த ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் பலதரப்பட்ட படங்களில் நடித்து, படிப்படியாக தனக்கு முக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஆரம்பித்து, கதாநாயகனின் நண்பன், வில்லன், குணச்சித்திரம் போன்ற அனைத்து கதாபாத்திரங்களும் அடங்கும்.
அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி, ஐ.வி சசி அவர்கள் இயக்கிய படமான உயரங்களில் என்ற படத்தில் நடித்தார். அதன் கதை ஒரு இளைஞன் தன் வளர்ச்சிக்காக எந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றத் தயங்காமல் துரோகம் இழைப்பதை கருத்தாகக் கொண்டது. இதன் முக்கிய கதாபாத்திரமான இளைஞனின் பாத்திரத்தில், ஆன்டி ஹீரோவாக, மோகன்லால் நடித்தார். இது அவருடைய நடிப்பின் சிறப்பை உயர்த்திக்காட்டிது. அதேநேரம் அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.
1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன. கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது.. படிப்படியாக உயர்ந்து வரும் இளம் கலைஞர்களில் ஒருவரான, திறமை வாய்ந்த மோகன்லால், பல தரப்பட்ட உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தக்கூடிய அழகான பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றதோடல்லாமல், இவர் மலையாளத் திரை உலகில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுடனும் இயக்குனர்களுடனும் நல்லுறவை மேம்படுத்தவும் செய்தார்.
1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது. இவர் நிழலுலக தாதாவாக நடித்த ராஜாவின்டே மகன் என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லால் ஒரு சூப்பர் ஸ்டாராக வெளிப்படுவதை உறுதி செய்தது. அதே வருடத்தில் இவர், தாளவட்டம் என்ற படத்தில் மனநலக் காப்பிடத்தில் இருக்கும் நோயாளியாக நடித்திருந்தார். சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் படத்தில் வாடகைக்கு இருக்கும் குடும்பத்திற்கு பெரும் தொல்லைகள் கொடுக்கும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்திலும், எம்.டி. வாசுதேவன் நாயரின் பஞ்சாக்னியில் பத்திரிகையாளர் வேடத்திலும், நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் படத்தில் காதல் வசப்பட்ட பண்ணையாளராகவும், காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் படத்தில் வேலையில்லாது தவிக்கும் இளைஞன் கூர்காவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை சித்தரிக்கும் கதப்பாதிரமாகவும் நடித்தார்.
எழுத்தாளர் - இயக்குனர் ஜோடியாக திகழ்ந்த ஸ்ரீநிவாசன், சத்யன் அந்திக்காடு ஆகியோர் போன்ற சமூக பொறுப்போடு, சமுதாய சீர்கேடுகளை நையாண்டி செய்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களுடன், இணைந்து பணியாற்றிய படம் நாடோடிக்கட்டு, இதில் வேலையில்லா இளைஞனாக நடித்தார். ''வரவேல்பு'' என்ற படத்தில் இவர் அரபு நாட்டில் இருந்து திரும்பி வரும் நாயகனாக நடித்தார், பேராசை கொண்ட உறவினர்களும் , பகைமை உணர்வுடன் நடத்தும் நாட்டுநிலவரத்தைக் கண்டு அஞ்சும் தொழில்முனைவோர் வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய சித்ரம், கிலுக்கம்படங்களில் வசீகரமான காதல் கதாப்பாத்திரங்களில் நடித்து இளம் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமானார். இத்திரைப்படங்கள் இசைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன.
இந்திய கதாநாயகர்கள் வழக்கமான கதாப்பாதிரங்கலையே ஏற்று நடித்து வந்த நேரத்தில் தூவானத்தும்பிகள் என்ற படத்தில் இரு பெண்களிடம் காதல் கொண்டு அவதிப்படும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் முதல் நாயகியிடம் அடி வாங்கிய மறு கணமே இன்னொரு பெண்ணிடம் காதல் வசப்படும் யதார்த்த நாயகனாக இவர் நடிக்கத் துணிந்தார். அம்ரிதம்கமைய என்ற படத்தில் இவர் கல்லூரியில் நையாண்டி செய்து, அறியாமல் கொன்று விட்ட ஒரு சிறுவனின் வீட்டிற்கே வந்து சேரும் கதாப்பாத்திரம் . தாழ்வாரம் என்ற படம் இந்த கால கட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படமாகும்.
எழுத்தாளர் லோஹிததாஸ் மற்றும் இயக்குனர் சிபி மலையில் ஆகியோர் இணைந்து ஜோடியாக உருவாக்கிய படங்கள் இவருக்கு மிகவும் பிடித்தமான மனம் கவரும் பாத்திரங்களைப் பெற்றுத்தந்தன. கிரீடம் என்ற படத்தில் சேது மாதவன் எனும் ஒருவன் போலீஸ்காரனாக வேண்டும் என்ற கனவு கண்டு கடைசியில் குற்றவாளியாக கூண்டில் நிற்பவனாக நடித்திருந்தார். இது அவருக்கு தேசிய அளவிலான சிறந்த நடிருக்கான சிறப்பு நடுவர் குழு விருதைப் பெற்றுத் தந்தது. இதற்கு அடுத்த வருடத்தில், பரதம் என்ற படத்தில் இவர் ஒரு மரபார்ந்த பாடகர் வேடத்தில் நடித்தார், இதில் பாடகரான தன் சகோதரன் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டேன் என்று வருந்துவதும், அவருடைய இறப்பால் மனம் வெதும்புவதும், அண்ணனின் மரணத்தை மறைத்துவைத்து தங்கையின் திருமணத்தை நடத்தத் துடிப்பதுமதான வேடத்தில் நடித்ததற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
90 ஆம் ஆண்டுகளிலும் இவர் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ் போன்ற மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள் வெளியானது. இதில் இவர் இஸ்லாமியராக நடித்தார். அதில் நம்பூதிரி வேடம் பூண்டு ஒரு ராஜவம்சத்தினனைக் கொல்லத்துணிகிறார். இந்த கால கட்டத்தில் வணிக ரீதியாக வெற்றியடைந்த இதர திரைப்படங்கள்மிதுனம் , மின்னாரம் , தேன்மாவின் கொம்பத்து போன்ற படங்கள் 80 ஆம் ஆண்டுகளைப்போலவே மரபு சார்ந்த நல்ல திரைப்பட கதைகள் கொண்டவையாகவும், நல்ல பாத்திர அமைப்பு பெற்றவையாகவும் திகழ்ந்தன. தேவாசுரம் , ரஞ்சித் எழுதி ஐ.வி சசியின்இயக்கத்தில் உருவானது, மத்திய கேரளாவில் இராணுவ ஆட்சியின் காலத்தை சுட்டி காட்டும், அப்படத்தில் மோகன்லால் திமிர் பிடித்த, பணக்கார முரட்டுத்தனம் நிறைந்த வாலிபனாக தோன்றி வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக சஞ்சலமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அடக்கமானவராக மனம் மாறும் பாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இயக்குனர் பத்ரனின் ஸ்படிகம் என்ற படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், மோகன்லாலின் கதாபாத்திர அமைப்பும் புதுமையாக அமைந்து மாபெரும் வெற்றி படமானது. சிறந்த படங்கள் குறைவாக வந்துக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் மணிசித்திரத்தாழ், போன்ற கலை மற்றும் வியாபார ரீதியான வெற்றிப்படங்கள் வெளிவந்தன மனிச்சித்திரத்தாழ் படத்தில் நடித்ததற்காக சோபனா சிறந்த நடிகிக்கான தேசிய விருதைப்பெற்றார்.
அவருடைய திரைப்பட வாழ்க்கையின் இந்த கால கட்டத்தில் கேரளத்தில் மோகன்லால் அடைந்த அளவற்ற மக்கள் செல்வாக்கின் காரணமாக, படத் தயாரிப்பாளர்கள் அவரை திரைப்படங்களில் எதற்குமே அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத, நிஜ வாழ்க்கையை மிஞ்சும் கதாநாயகனாக பல படங்களில் நடிக்க வைத்து வியாபாரமாக்கினர். அந்த நாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி ஆறாம் தம்புரான் , நரசிம்ஹம் , ராவணப்பிரபு, நரன் போன்ற திரைப் படங்களைத் தயாரித்தனர். அவை யாவும் வெற்றிப்படங்களாகவே திகழ்ந்தன. ஆரம்பத்தில் அவை புதுமையாக காணப்பட்டாலும், காலப்போக்கில் இவ்வாறான படங்கள் நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வாமலும், மோகன்லாலை சுற்றியே வடிவமைந்ததாகவும் பல இடங்களில் இருந்து கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. 90 களின் இறுதியில் வெளிவந்த இயக்குநர் ப்ரியதர்ஷனின் காலாபானி இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் அந்தமான் தீவில் உள்ள குறுகிய சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்பட்ட கைதிகளைப்பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் தான் மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மொழிப்படமான இருவரில் நடித்தார். இந்தப் படத்தில் மோகன்லால் அவரது அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர் எம்ஜிஆர் (தமிழக முன்னாள் முதல்வர்) அவர்களின் வேடத்தில் நடித்தார். பின் இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான வானப்ரஸ்தம் என்ற படத்தில், தமது அடையாளத்தையே இழந்த கதகளி நாட்டிய விற்பன்னராக வேடம் புனைந்தார், இது அவருக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் உலக அளவில் அவரது திறமையை அறியவைத்த முதல் படமாக இது திகழ்ந்தது. கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் பிரிவில் இப்படம் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. அவரது நடிப்பு பல திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெற்றது.
2002 ஆம் ஆண்டில், மோகன்லால் அவரது முதல் பாலிவுட் படமான, கம்பெனி யில் நடித்தார், இப்படம் இந்தியாவில் பரவலாக பேசப்படும் ஹிந்தி மொழி ரசிகர்களிடம் அவரை அறிமுகப்படுத்தியது. இப்படம் வணிக ரீதியில் சிறப்பான வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. 2006 ஆம் ஆண்டில், இவர் நடித்த தன்மாத்ரா என்ற படத்தில், அல்செய்மர்ஸ் நோயால் (மறதி வியாதி) அவதியுறும் ஒரு பாத்திரத்தின் நடிப்பு அவருக்கு கேரள மாநிலத்தின் சிறந்த நடிகாருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அவரது இரண்டாவது பாலிவுட் திரைப்படம் ராம் கோபால் வர்மா கி ஆக் , இப்படம் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப்படமான ஷோலே படத்தின் மறு தயாரிப்பாகும். மேலும் அதில் சஞ்சீவ் குமார் அவர்கள் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் தோன்றினார். பரதேசி என்ற படத்தில் வலியகத்து மூசா என்ற வேடத்தில் நடித்ததற்காக மோகன்லால் அவர்களுக்கு கேரள மாநிலத்தின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பரதேசி என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு கிடைக்கவேண்டிய சிறந்த நடிகருக்கான விருதை மோகன்லால் அவர்கள் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் இழந்தார். 2009 ஆம் ஆண்டில் மோகன்லால் கமல் ஹாசனுடன்தமிழ் படமான உன்னைப்போல் ஒருவனில் நடித்தார். அவரது நடிப்பை தமிழ் ரசிகர்கள் மிகவும் போற்றினர்.
இதர இந்தியத் திரைப்பட நடிகர்களைப் போல மோகன்லால் அவர்களுக்கு திரைப்படத்திற்கு முந்தைய நாடக அனுபவம் இல்லை. இருந்தாலும் அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். நியூ டெல்லியில்நேஷனல் தியேட்டர் பெஸ்டிவல் என்ற பெயரிலான தேசிய நாடக விழாவில் பங்குபெற்ற ஒரு நாடகமானகர்ணபாரம் என்ற சமஸ்க்ரித மொழி நாடகத்தில் அவர் கர்ணன். வேடத்தில் நாடகமேடையில் முதன்முதலாகத் தோன்றினர். இந்த நாடகம் குருக்ஷேத்திரத்தில் நடக்கவிருக்கும் போரின் முந்தைய நாள் அன்று, கர்ணனின் மனதில் காணப்படும் சஞ்சலத்தை, அவருடைய கடந்த கால நிகழ்வுகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி அவர் நினைக்கும் பொழுது அவர் படும் மன உளைச்சலை சித்தரிப்பதாகும்.
கதையாட்டம் என்ற வகைப்பாட்டில் மோகன்லால் மலையாள காவியங்களில் இருந்து தெரிவு செய்த பத்து மறக்க முடியாத பாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தார். அதை அவர் தமது தாய் மொழிக்கு சமர்ப்பணம் செய்வதாகக் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குனர் டி.கே. ராஜீவ்குமார் கற்பனையில் உதித்த இந்தக்காட்சியின் வடிவமைப்பு, மேடை நாடக நடிப்பு, திரைப்படத்திற்கான முகத்தோற்றம், ஒலி மற்றும் ஒளி அமைப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் இசை நயம் அனைத்தும் கொண்ட ஓர் அற்புத கலவையாகும். 'காளிதாசா விசுவல் மேஜிக்' என்ற பெயரில் மோகன்லால் மற்றும் அவருடன் புகழ் பெற்ற நடிகரான முகேஷும் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் தற்போது மிகவும் அண்மையில் சாயாமுகி என்ற நாடகத்தைத் தயாரித்தது. மோகன்லால் பீமன் வேடத்திலும் முகேஷ் கீசகன் வேடத்திலும் நடித்தார்கள்.


Next: மோகன்லால்- கதாபாத்திரங்கள் வழியாக

இயல்பான நடிப்பின் சூப்பர்ஸ்டார்



அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், மோகன்லால்- இவர்கள் அனைவருக்கும் சில ஒத்துமைகள் இருக்கின்றன. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள், தாங்கள் நடிக்கவந்த மொழிகளில் வில்லன்களாக அறிமுகம் ஆனவர்கள், தங்களது திறமையால் மட்டுமே வளர்ந்து வந்தவர்கள். நடிப்பில்  தங்களுக்கு என்று ஒரு புதியபாதையை வகுத்தவர்கள், வில்லன் வேடங்களில் மிகப்பெரும் வெற்றிபெற்று, நாயகர்களாக மாறியவர்கள், மக்களின் பேராதரவைப் பெற்று அந்தந்த மொழிகளில் உச்சத்தைத் தொட்டு சூப்பர்ஸ்டார் ஆனவர்கள்!
“என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்தான்”- இது இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் ஒரு முறை சொன்ன வார்த்தைகள்தான். இது அவர் தன்னுடைய நல்ல குணத்தாலும், பணிவாலும், மேடைமரியாதைக்காக சொன்ன வார்த்தைகள் அல்ல. உண்மையிலேயே நடிப்பின் அனைத்து அம்சங்களையும் அலசியபின் அவர் மனதில் எழுந்த அபிபிராயம்தான். இப்படி மற்ற சூப்பர்ஸ்டார்கள் போற்றும் அளவுக்கு மோகன்லாலின் நடிப்பிற்கு என்னதான் சிறப்பு என்று கேட்டால், அதற்கு ஒரே பதில்தான் இருக்கும். அதுதான் “இயல்பான நடிப்பு!“
இந்திய திரையுலகில் எல்லா நட்சத்திரங்களும் மேலும் மேலும் புகழ்பெறும் போது நடிப்பைப் பொறுத்தவரையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வதுதான் வழக்கம். தங்களுக்கென்று ஒரு ரசிகர்வட்டத்தை உருவாக்கி, அந்த ரசிகர்களை திருப்திப்படுத்தவும், அவர்களின் ரசனையை வளரவிடாமல் தடுத்து, அதை தங்கள் நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும் தகுந்தபடி ஒரேமாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்.
அவ்வப்போது தான் இதற்கு மாறான படங்கள் இதுபோன்ற நட்சத்திரங்களிடமிருந்து வெளிவரும். அதில் மிகவும் முக்கியமானவர்கள் மலையாளத் திரைப்பட சூப்பர்ஸ்டார்கள் தான். அதற்கு அங்குள்ள ரசிகர்களின் பார்வையும் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் அப்படியொரு நிலமை அங்கே ஆரம்பம் முதலே வழக்கமாக இருந்துவருவது சிறப்புதான்.
சத்யன், பிரேம் நசீர், மது போன்றவர்கள் உச்சநட்சத்திரங்களாக இருந்தபோது அவர்கள் வியாபாரரீதியான படங்களில் நடிக்கும்போது அதற்கு இணையாக கலைப்படங்களிலும் நடித்து வந்தனர். அதே பாதையைத்தான் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி போன்றவர்களும் தொடர்ந்து வந்தார்கள்.
மற்ற மொழிகளில் கமலஹாசன் போன்றோர் இப்படி வித்தியாசமான படங்களை எடுக்க முயற்சிப்பதுண்டு. இந்தியில் அமீர்கான் போன்றவர்களும் இந்த பாதையை பின்பற்றி வருவது பாராட்டுக்குறிய விஷயம் தான்.
ஆனால் இந்த விஷயத்தில் மிகப்பெரும் வெற்றிபெற்றவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும் தான். இருவருமே பலமுறை தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்று கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகவும் அந்த அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு அதிசயமான விஷயம்தான்.
இருவரும் ஒரேபோலத்தான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார்கள் என்றாலும், படங்களைத் தேர்வுசெய்வதிலும், கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்வதிலும், இருவரும் வித்தியாசப்படுகின்றனர். அதிலும் மோகன்லால் பின்பற்றுவது தனக்கே உரித்தான ஒரு பாதைதான்.
ஆரம்பகாலகட்டத்தில் நிறையபடங்களில் நடிக்கவேண்டும் என்ற ஒரு லட்சியத்தைத் தவிர இவருக்கும் வேறு எந்த ஒரு எண்ணமும் இருந்ததில்லை. ஒரு வருடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் ஆரம்பித்த அவரது பயணம், பலபல சிறுசிறு பாத்திரங்களில் தொடங்கி வில்லன், குணச்சித்திரம், நல்லவன், கெட்டவன், ஆன்டி ஹீரோ என தொடர்ந்தது. மஞ்சில் விரிந்த பூக்களுக்கு பிறகு உண்மையில் அவருக்கு சொல்லும்படியாக கிடைத்த ஒரு நல்ல வேடம் பாலசந்திரமேனனின் கேள்க்காத்த சப்தம் என்ற படத்தில்தான். ஒரு வில்லன் வேடம். அதற்கு பிறகு அவர் திரும்பி பார்த்ததே இல்லை.
ஆரம்பத்தில் மற்ற நட்சத்திரங்களுடன், முக்கியமாக மம்முட்டியுடன் இணைந்து பல படங்களில் நடித்துவந்தார். இதற்கு மத்தியில் மோகன்லால் ஆன்டி ஹீரோவாகவும் அதைத்தொடர்ந்து ஹீரோவாகவும், பிறகு சூப்பர் ஸ்டாராகவும் வளர்ந்து விட மம்முட்டியுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அத்துடன் படத்தின் வெற்றிக்கு தன்னுடைய பங்கை உணர்ந்து, அதற்கு தகுந்தபடி கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார். அது மேலும் மேலும் அவருக்கு வெற்றியையும் புகழையும் கொடுத்தது.
இந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் ஏற்கனவே சொன்னபடி இயற்கையாகவே கிடைத்த நடிப்புத்திறன்தான். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தன்னுடைய இயல்பான நடிப்பால் மெருகேற்றிவிடவும், இயக்குநர்களே வியக்கும் அளவுக்கு அதை வெற்றி பெறச்செய்யவும் அவரால் முடிந்தது. இதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம்.
மோகன்லால், அவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார், மேலும் அவர் நடிக்கும் பொழுது அவர் உள்ளுணர்வு சொல்வதை நம்பியே நடித்து வருகிறார் மற்றும் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுவதையே அவர் விரும்புகிறார்.
மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு பாத்திரத்தின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராவார் பட இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கும் நம்பக்கூடிய முக பாவங்களை சித்தரிக்கக்கூடிய நடிகராக திரை உலகில் அறியப்படுகிறார். அவர் பிற மொழிப்படங்களில் நடிக்கும் பொழுது கொஞ்சம் மன உளைச்சலுடன் காணப்படுகிறார், அம்மொழிகளில் அவருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லாததாலும், மேலும் அதற்கான காரணம் அவருக்கு அந்தந்த மொழிகளில் காணப்படும் சிக்கல்களை அவர் அறியாதிருப்பதே என்பதை உணர்ந்துள்ளார்.
இவருடைய நடிப்பின் அடிப்படையில் இவர் நடித்த கதாபாத்திரங்களையும் படங்களையும் நான்கு பிரிவுகளாக பட்டியலிடலாம். முதலாவது, இயக்குநர்களின் படைப்புகளாக மட்டும் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் படங்கள். இந்த பிரிவில் பாசிலின் படங்களில் ஆரம்பித்து (உதாரணத்திற்கு மணிச்சித்திரத்தாழ் போன்ற படங்கள்), பரதன் (காற்றத்தே கிளிக்கூடு, தாழ்வாரம்), பத்மராஜன் (தூவானத்தும்பிகள், நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்), ஷாஜி (வானப்பிரஸ்தம்) போன்று பல இயக்குநர்களின் கதாபாத்திரங்களை திரையில் வாழவைத்தார்.
இரண்டாவது, சாதாரணவாழ்வில் நாம் கண்டுவரும் இயல்பான மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள். முக்கியமாக இதுபோன்ற கதாபாத்திரங்கள் தான் மோகன்லாலின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். இதுபோன்ற கதாபாத்திரங்கள் கொண்ட கதைகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கு உதாரணமாக சத்தியன் அந்திக்காடு இயக்கிய நாடோடிக்காற்று, காந்திநகர் 2வது தெரு, லோகிததாஸ்- சிபி மலையில் கூட்டணியில் வந்த கிரீடம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, கமலதளம், பிரியதர்ஷன் இயக்கிய சித்ரம், தாளவட்டம், கிலுக்கம் போன்ற படங்களைக் கூறலாம்.
மூன்றாவது, மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தையும், அவர்மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பையும் வியாபாரம் செய்து பணம் பண்ண, அல்லது அவருடைய நட்சத்திர அந்தஸ்தை வளர்ப்பதற்காக, அவருடைய நடிப்பையும் நடை உடை பாவனைகளையும் பின்பற்றியே வந்த வியாபாரப்படங்கள். இந்த படங்களில் பல கதாபாத்திரங்களும் கலைநயத்துடனும் இயல்பான குணங்களும் கொண்டவையும் தான். அதுவே அந்த படங்களில் பெருவாரியாக வெற்றிபெறச்செய்தது.
நான்காவது, இதுபோன்ற எந்த ஒரு நல்ல லட்சியமும் இல்லாமல் பணத்திற்காகவும், நண்பர்களுக்காகவும், சில நேரங்களில் மக்களுக்கு பிடிக்கும் என்று தவறாக எண்ணியும் எடுக்கப்பட்ட சில படங்கள். அவற்றைப்பற்றி இங்கு பட்டியலிடத் தேவையில்லை. ஆனால் மோகன்லாலும் இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பதை மறக்கக் கூடாது. வளர்ந்து வரும் நடிகர்கள், அவரை பின்பற்ற நினைக்கும் போது, அவர் செய்த இதுபோன்ற தவறுகளையும் கணக்கில் கொண்டு, அதுபோன்ற தவறுகள் தங்களுக்கு நேராமல் இருக்க முயற்சிக்கலாம்.
எந்த ஒரு கதாபாத்திரமானாலும், அது பெரிய இயக்குநர் இயக்கும் படமாக இருந்து, புகழ் கிடைக்கும் என்று கண்டிப்பாக தெரிந்தாலும், அல்லது பேருக்கு இன்னொன்று என்ற எண்ணத்தில் ஏஆதோ காரணத்திற்காக ஒப்புக் கொண்டு நடித்த படத்தின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நடிப்பில் மோகன்லாலின் முத்திரை கண்டிப்பாக வெளிப்படும். கதாபாத்திரத்திற்கு ஏற்றதுபோல, மட்டுமல்ல, ஒரே படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும் வெவ்வேறு காட்சிகளில்கூட அந்த காட்சிகளின் இயல்புக்கு ஏற்றபடி அவருடைய நடிப்பு வித்தியாப்படும். அந்த மாற்றம்கூட இயல்பாகவே பார்வையாளருக்குத் தெரியும்.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, பிரபலமான எந்த ஒரு காமடி நடிகரையும் விட இயல்பாக காமடி செய்யும் மோகன்லால், அதற்கடுத்து ஒரு மாஸ் ஹரோ படத்தில் கற்பனைக்கும் அதீதமான பலம்வாய்ந்த ஒரு மனிதனாக எல்லா வில்லன்களையும் தோற்கடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது ரசிகர்களின் விசில் சத்தம் காதைப்பிளக்கவைக்கும் அளவுக்கு நடித்து வெற்றிபெறுகிறார். சோகக் காட்சிகளில் நடிக்கும் போது, வாய்விட்டு அழாமலே, கண்ணில் நிறைந்து ததும்பும் கண்ணீராலும். முகபாவனைகளாலும் மட்டுமே பார்வையாளர்களை அழவைப்பதில் இவருக்கு நிகர் இவரேதான்.

Sunday 30 August 2015

இலங்கைத் தமிழ் குறும்படங்கள்



இன்று டிஸ்கவரி புக் பாலசில நடந்த இலங்கைத் தமிழ் குறும்படங்கள் திரையிடளுக்குச் சென்றிருந்தேன். உண்மையிலேயே அந்தப் படங்களை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். கடந்த வாரம் பனுவலில் நடந்த திரையிடலுக்கு நண்பர் கவிதா பாரதி அழைத்திருந்தும் செல்ல முடியவில்லை. அந்த வருத்தம் இன்று தீர்ந்தது,
அட்சரம் என்ற தலைப்பில் தொகுத்த ஆறு படங்கள் திரையிடப்பட்டன. ஆரம்பகால படிப்பாளிகள் எடுத்த் படங்கள் என்ற முறையில் இவற்றில் உள்ள குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து குற்றம் கூறி விமர்சனம் பண்ணவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக இவற்றை ஒரு அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம், இந்த படைப்பாளிகள் அந்த மழலை நிலையை எல்லாம் தாண்டிவிட்டார்கள்.
உண்மையைச்சொன்னால் இங்கு, தமிழ்நாட்டில் எடுக்கப்படும்  குறும்படங்களுக்கு சற்றும் குறையாத தரத்தில் தான் இந்த படங்கள் இருக்கிறது என்று மட்டும் அல்ல, நானும் குறும்படம் எடுக்கிறேன் என்று இங்கு சிலர் திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைப்பதற்கு ஒரு வழி என்ற முறையில் எடுக்கும் குறும்படங்களை விட இந்த படங்கள் மிகவும் அழகானவைதான்.
அரசியல். பொருளாதார. சமூக சூழ்நிலைகள் காரணமாக, அவர்களுடைய வாழ்வின் எல்லா பிரச்சினைகளையும் இவை பிரதிபலிக்கவில்லை என்றாலும், ஆரம்ப கட்டம் என்ற முறையில் அவர்களுடைய வாழ்வியல் சோகங்கள் இந்த படங்களில் இழயோடியிருப்பதை உணரமுடிகிறது,
திரு ட்ராடஸ்கி மருது அவர்கள் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு முன்னரை தந்தது இந்த படங்களை இன்னொரு கோணத்தில் ரசிக்க மேலும் உதவியது. அவருக்கு நன்றி.
இந்த படங்களை திரையிட்ட அமுதன் அவர்களுக்கும் நன்றி.

இந்த படங்களில் பாரறிய அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

Monday 3 August 2015

திரைப்பட இலக்கியச் சங்கமம் – ஒரு வேண்டுகோள்




நேற்று நடந்த தனியாவர்த்தனம் திரையிடல் நிகழ்வின் அனுபவம் உண்மையாகவே என்னை உலுக்கியது. இது திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்துவது பற்றியும், அதன் லட்சியத்தை அடைவதற்கான மாற்று வழிகளைப் பற்றியும் மேலும் ஆழமாக சிந்திக்கத் தூண்டியது.
அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்தேன். திரைப்படத்தில், குறிப்பாக தமிழ்த் திரையுலகில் ஒரு நல்ல முயற்சி என்ற கோணத்தில், என்னால் செய்யக்குடிய, செய்தே ஆகவேண்டும் என்று மனப்பூர்வமாக கருதிய திரைப்பட இலக்கியச் சங்கமத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு ஐந்தாவது ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு முன்பு பல மேடைகளிலும் இதைப்பற்றி பேசவேண்டும் என்ற முடிவிலும் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக அத்துடன் சேர்ந்து, அதைச்சார்ந்த, என்னால் முடிந்த இன்னும் சில விஷயங்களைச் செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதில் முக்கியமானது, இதுபோன்ற திரையிடல்கள் நடக்கும் முன்பு அந்த திரைப்படங்கள் பற்றிய ஒரு அறிமுக உரை வலைதளம் மூலமாக வெளியிடவேண்டும் என்பதுதான். அது அந்த படங்களுக்கும், அதை உருவாக்கிய கலைஞர்களுக்கும் செய்யும் ஒரு மரியாதையாகவும் இருக்கும், அதிக ரசிகர்களை, கலைஞர்களை அல்லது திரைப்பட மாணவர்களை அந்த கூட்டத்திற்கு வரும்படி ஈர்க்க ஒரு வழியாகவும் இருக்கும். இந்த வேலையை என்னால் முடிந்த அளவு செய்ய முடிவுசெய்திருக்கிறேன்.
இன்னொரு விஷயம்,  இது சம்பந்தமாக,  இதன் தொடர்ச்சியாக, நடத்தப்பட வேண்டிய சில உரையாடல்களைப்பற்றியது. பலநேரங்களில் திரைப்படம் சார்ந்த விஷயங்களில், குறிப்பாக எழுத்து, தொழில்நுட்பம், மற்றும் வியாபாரம் பற்றிய விஷயங்களில், பலருடைய மேடைப்பேச்சுக்கள் என் மனதில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.
இதைப்பற்றியெல்லாம் நான் ஒரு இயக்குநராக வெற்றிபெற்ற பிறகுதான் எழுதுவேண்டும் என்ற முடிவில்தான் இதுவரை இருந்து வந்தேன். ஆனால், இதுவரையிலான அனுபவத்தின் அடிப்படையில், இவற்றைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இப்போது தோன்றுகிறது. குறிப்பாக திரைப்பட இலக்கியம் சம்பந்தமான விஷயங்கள்.
இயக்குநராவதற்கான முயற்சி ஒரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது அதன்பாட்டில் நடக்கட்டும். அதே நேரத்தில், நண்பர்கள் விருப்பப்பட்டால், அல்லது இந்த விஷயங்களில் ஏதாவது சந்தேகம் கேட்டால், அந்த விஷயங்களைப்பற்றி எழுதலாம், அல்லது உரையாடலாம் என்றும் முடிவு செய்துள்ளேன்.
நண்பர்கள், மாணவர்கள் கேட்டால் அதற்குத் தகுந்த பதிலை, எனக்குத் தெரிந்தவரை, எனக்குத் தெரியாத விஷயமாக இருந்தால் முடிந்தவரை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்தாவது இங்கே  எழுதுகிறேன்.
உண்மையாக திரைப்படத்தை நேசிப்பவர்கள், இலக்கியத்தை திரைப்படத்துடன் இணைக்க விரும்புவர்கள், ஏதாவது ஒரு நிகழ்வை அமைத்து, அதில் எனக்கு பேச வாய்ப்புத் தந்தால் கண்டிப்பாக நான் திரைப்படமும் இலக்கியமும் என்ற தலைப்பின் அடிப்படையில் பேச தயாராக உள்ளேன். திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்தை நிறைவேற்ற அது பெரும் உதவியாக இருக்கும். இதற்காக திரைப்படம், இலக்கியம் என்பது போன்ற தலைப்பிற்காகவே ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என்பதில்லை. திரைப்படம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தும்போது, அதனையொட்டி பேச வாய்ப்பு தந்தாலே போதுமானது. அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
இதுவேதான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் அடுத்த கட்ட பயணமாகவும் இருக்கும்.
இதுவேதான் நான் என்னுடைய நண்பர்களிடம், அவர்கள் சார்ந்த அமைப்புகளிடமும், திரைப்படம் சார்ந்த கல்வி நிறுவனங்களிடமும் இதன் மூலம் வைக்கும் ஒரே விண்ணப்பம். 

திரைப்பட இலக்கியமும் நடிப்பும் - ஒரு தனியாவர்த்தனம்.




திரைப்படங்கள், அல்லது நாடகங்களில் உள்ள நடிப்பிற்கும் அதன் இலக்கியத்திற்கும மிக ஆழமான தொடர்பு இருக்கிறது. அது என்றும் எப்போதும் எல்லா நிலையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அது என்றும் தனியாவர்த்தனம் தான்.
நடிப்புக்கு என்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதை எல்லோரும் கற்றுக்கொண்டு நடிக்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், வெற்றிபெற்ற எல்லா நடிகர்களின் நடிப்பிலும் அந்த இலக்கணத்தின் பிரிவுகளை நாம் பொருத்திப் பார்க்க முடியும்.
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் இந்த தனியாவர்த்தனம் என்ற திரைப்படம். உண்மையிலேயே தம்பிசோழன் ஒரு மிகச்சிறந்த படத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார். நடிப்பைப் பற்றி சொல்ல இதுபோன்ற படங்களைவிட வேறு எதுவும் தேவையில்லை.
திரைப்பட இலக்கியம் எப்படி திரைப்பட நடிப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்ட இந்த படம் மிகப்பெரும் உதாரணமாக திகழுகிறது என்பதில் எந்த சந்தேகமில்லை.
ஒருவர் நேரிலோ, மேடையிலோ, அல்லது திரையிலோ வெறுமெனே அழுதால் நாம் அழுவோமா? இல்லை. அது பாசமலரில் சிவாஜி நடித்த கைவீசம்மா கைவீசம்மா காட்சியாகவே இருந்தாலும், அழுபவருக்கு ஏதோ பிரச்சினை, பைத்தியம் என்று தான் நாம் நினைப்போம். வேண்டுமென்றால் பரிதாபப்படுவோம்.
அப்புறம் சில படங்களில் வரும் இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது நாமும் ஏன் சேர்ந்து அழுகிறோம்? எந்த காட்சியை பார்த்தும் அழாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை. என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களை மட்டும்தான் நான் சொல்கிறேன்.
நான் சினிமா பார்க்கும்போது நகைச்சுவை காட்சிகளைக் கண்டு வாய்விட்டு சிரிப்பேன், சோகக்காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டு அழுவேன். அதை ஒரு குறையாக நினைத்து யார் முன்பும் மறைத்ததில்லை.
நேற்றும் கூட நானும் என் மனைவியும் இந்த தனியாவர்த்தனத்தை  பார்த்து தேம்பித் தேம்பி அழுதோம். இத்தனைக்கும் இதை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தது அல்ல. எத்தனையோ முறை பார்த்தும் மறுமுறை பார்க்கும்போதும் நாங்கள் அழுகிறோம்.
காரணம், அதன் கதை, அதையொட்டி வரும் காட்சிகள், அதை எடுத்த விதம், அதில் காதாபாத்திரங்களாக வாழ்ந்தவர்களின் நடிப்பு , இவையெல்லாம் சேர்ந்த சரியான சதவீதம்தான்.
ஒரு காட்சியைப் பார்த்து நாம் சிரிக்கிறோம் என்றால் கூட அதற்கு முந்தைய காட்சிகளுடன் தொடர்பு வேண்டியதில்லை. ஆனால்,  ஒரு காட்சி நம்மை அழவைக்கவேண்டும் என்றால், உணர்ச்சிவசப்பட வைக்கவேண்டும் என்றால், நம்மை புரட்சிகர சிந்தனைக்கு தூண்டிவிடவேண்டும் என்றால், கண்டிப்பாக அந்த காட்சிக்கு முன்னால் வந்த காட்சிகளும், அதன் பின்புலத்தில் உள்ள கதையம்சமும், கதைக்களமும், கதாபாத்திரங்களும் அந்த உணர்வை ஏர்ப்படுத்துவதாக இருக்கவேண்டும். அதுதானே திரைப்பட இலக்கியம்.
ஒரு நடிகர் நன்றாக நடிக்கலாம். ஒரு இயக்குநர் சொன்னபடி நடித்துவிடலாம். அதற்கு பிறப்பால் வந்த திறமையோ, பயிற்சியினால் வளர்த்த திறமையோ போதும். உதாரணமாக சிவாஜி, கமல், மம்முட்டி, மோகன்லால், திலகன் இப்படி எல்லோரும் சிறந்த நடிகர்கள்தான். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இருந்தாலும் இவர்கள் நடித்த எல்லா படங்களும் நம்மை அழவைத்திருக்கிறதா, உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறதா, சிந்திக்கத்தான் வைத்திருக்கிறதா?
அவர்கள் நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கு, அதை நாம் போற்றும் அளவுக்கு, கதையும் கதாபாததிரமும் அமைந்தால் மட்டும் தான் அவர்களுடைய நடிப்புத் திறன் கூட வெற்றிபெறும்.
திலகன் ஒரு முறை சொல்லியிருந்தார். ”நடிப்பில் இரண்டு பாணி இருக்கின்றன. ஒன்று யதார்த்த நடிப்பு, கமல், மோகன்லால் போன்றவர்கள் பின்பற்றுவது. கமல் சிலநேரங்களில் நடித்துக் குதறிவிடுவார், அதனால் அவருடைய ஆரம்பகால நடிப்பை மட்டும் தான் இங்கு குறிப்பிடுகிறேன். இரண்டாவது, டீடைல்ட் நடிப்பு. சிவாஜியும் நானும் பின்பற்றுவது. எங்கள் நடிப்பு சிலநேரங்களில் யதார்த்தத்தை மீறுவதுபோல் தோன்றும். நாடகத்துறையில் இருந்து வந்ததால் எங்களால் அதை தவிர்க்க முடியாது.“
ஆனால், திலகன் யதார்த்த நடிப்பிலும் டீடைலாக நடித்து தன் திறமையை வெளிக்காட்டியவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
இன்னொரு விதமாக சொன்னால் நடிப்பு என்பது ஆக்ஷன் மட்டுமல்ல, ரியாக்ஷனும்தான். ரியாக்ஷன் இல்லையென்றால் ஆக்ஷன் எடுபடாமல் போய்விடும். ஒன்றுக்கு மேற்பட்டோர் நடிக்கும் காட்சியில் ஒருவருடைய நடிப்பபின் வெற்றி அவருடைய ஆக்ஷனுக்கு தகுந்தபடி வரும் மற்றவர்களின் ரியாக்ஷனில்தான் இருக்கிறது.
காதரலிக்க நேரமில்லை படத்தில் வரும் பிரபல காட்சியை இதற்கு மிகச்சரியான உதாரணமாகச் சொல்லலாம். ஒரு வேளை திரு நாகேஷ் அவர்கள் கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது, திரு பாலையா அவர்கள், ஸ்டோன் ஃபேஸ் என்று சொல்வார்களே, அந்த பாவத்துடன் சும்மா இருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த தனியாவர்த்தனத்தை பொறுத்தவரை இதன் வெற்றிக்கு முழு மூலக்காரணம் ஏ.கே.லோஹிததாசின் கதைதான். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு வித்தியாசமான களத்தை எடுத்து, நல்லதொரு கதையை அமைத்து, திரைக் காட்சிகளாக வடித்துவிட்டார். அதை மிகச்சரியான முறையில் இயக்கியிருக்கிறார் சிபிமலையில். இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் கைதேர்ந்தவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். லோஹிததாஸ், சிபி மலையில் கூட்டணியில் வெளிவந்த பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துள்ளா, கமலதளம், கிரீடம் போன்ற படங்கள் எந்த தரத்தில் இருந்தன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட இவர்கள் கூட்டணியில் உருவான இந்த தனியாவர்த்தனத்தில் யார் நடித்தாலும் வெற்றி பெறும். ஆனால் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்திருந்தார் சிபி மலையில்.
லோஹிதாஸைப் பொருத்தவரை இது முதல் படம். அதனால் இதை தேர்வு செய்த சிபிமலையிலும், மம்முட்டியையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த படம் வெளிவந்த காலத்தில், இந்த படத்தையும் இதில் நடித்த அனைவரையும் பாராட்டத திரையுலகத்தினரே இல்லை என்று சொல்லலாம். அந்த வருடத்தின் சிறந்த கதை என்ற கேரள மாநில அரசின் விருது இந்தப்படத்திற்காக லோஹிததாசுக்கு கிடைத்தது என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த படம் ஆரம்பிக்கும்போதே கதையினுள் சென்றுவிடும். அதனால் கதையின் களத்தைப்பற்றியும் கதாபாத்திரங்கள் பற்றியும் ஒரு விரிவான அடிப்படைச் சித்திரம் நம் மனதில் பதிந்துவிடும். தொடர்ந்து வரும் காட்சிகள் அதன்மீது வண்ணங்களை முறையாக இறைத்துக்கொண்டே இருக்கும்.
எந்த கதாபாத்திரத்திற்கும் அறிமுகம் வேண்டும் என்றவிதத்தில் தனியாக காட்சிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. திரைக்கதையின் ஓட்டத்திலேயே எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி இருப்பார்கள்.
அப்படி நம்மை கட்டிப்போடும் திரைக்கதை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தோன்றிய ஒவ்வொரு நடிகருக்கும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தந்திருக்கிறது. எல்லா நடிகர்களும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம்.
அந்த வருடத்தின் சிறந்த நடிகர் என்ற கேரள அரசின் விருது மம்முட்டிக்கு கிடைக்கவில்லை. அது அவர் சிறந்த நடிகர் அல்லாததாலோ, அல்லது இந்த படத்தில் அவர் நன்றாக நடிக்கவில்லை என்பதாலோ அல்ல.  அந்த வருடத்தில் மற்றொரு படத்தில் மோகன்லால் இதைவிட சிறப்பாக நடித்ததால் தான். ஆனால் அந்த வருடத்திய பிலிம்பேர் விருது மம்முட்டிக்கு இந்த படத்திற்காக கிடைத்தது.
அந்த வருடத்தின் கேரள அரசு விருதுகளில் சிறந்த இரண்டாவது நடிகர் விருதை திலகன் இந்த படத்திற்காக பெற்றார். அத்தோடு இரண்டாவது சிறந்த நடிகை என்ற விருதை பிலோமினா அவர்கள் இந்த படத்திற்காக பெற்றிருந்தார்.
இதில் எந்த ஒரு நடிகருடைய நடிப்பு சிறந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாது. எல்லோரும் அவரவர்கள் பாத்திரத்தை உண்ர்ந்து நடித்திருந்தனர். சிறு சிறு பாத்திரங்களில் வரும் நடிகர்கள்கூட நம்மை வசீகரித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய நடிப்புக்கும் முத்தாயப்பாக ஒவ்வொரு காட்சி இந்த படத்தில் காணலாம். அதற்காக இன்னொருமுறை லோஹிததாசையும் சிபி மலையிலையும் பாராட்டுவதில் தவறே இலலை.

திரைப்பட இலக்கியச் சங்கமம் – புதிய பாதையில்


உணமையில் நான் இந்த மாதம் எனது திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் நான்காவது ஆண்டுவிழாவை நடத்தவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன்.
திரைப்படத்தையும் இலக்கியத்தையும் ஒன்றிணைக்க வேண்டும், குறிப்பாக தமிழ் திரையுலகில், என்ற லட்சியத்தின் அடிப்படையில் நான் ஆரம்பித்த அமைப்புதான் இது. கடந்த 2011ல் ஆரம்பித்து தொடர்ந்து மூனறாண்டுகளுக்கு மேல் இதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.
வழக்கமான குடும்பச் சிலவுகளுக்கு தேவையான வருமானத்தை விட, என் பாக்கட்டில் என்றெல்லாம் பத்தாயிரம் ரூபாய் இருந்ததோ அன்றெல்லாம் நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்தியுள்ளேன்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு தயக்கம், சந்தேகம். நான் இப்படி கஷ்டப்பட்டு இந்த நிகழ்வை நடத்துவதனால், நான் நினைத்த பலனை அடைய முடிகிரதா? இந்த சங்கமத்தின் லட்சியம் நிறைவேறுகிறதா? அப்படி யோசிக்கையில் திரைப்பத்தையும் இலக்கியத்தையும் இணைக்க வேண்டும் என்ற லடசியத்தை அடைய இதை விட சிறந்த வழிகள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகள் தொடர்ந்து மனதுக்குள் எழ, அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
நான் எல்லோரையும் அழைத்து கூட்டம்போட்டு இப்படி சங்கமம் நடத்துவதால் பயன் இல்லாமல் இல்லை. இந்த சங்கமங்களுக்கு வரும் நண்பர்கள், புதியதாக வரும் கலைஞர்கள். படைப்பாளிகள் மற்றும மாணவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால், என்னதான் நான் கஷ்டப்பட்டாலும், இந்தந சங்கமங்களுக்கு வருபவர்கள் மிகக்குறைவுதான். அதுவும் வந்தவர்கள்தான் அநேகமாக தொடர்ந்து வருகிறார்கள். அதுவும் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள் மட்டும் அல்லது நட்புக்காக வருபவர்கள்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்களையும், மாணவர்களையும் இந்தச் சங்கமத்தின் லட்சியம் சென்றடைய, இது வழியாக நான் சொல்ல நினைத்ததை எடுத்துரைக்க, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நானே அவர்களைச் சந்தித்து, சொல்வதுதான் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துகொண்டேன்.
அப்படி நடக்க வேண்டும் என்றால் நானே எல்லா இடங்களிலும், கூட்டம் போட வேண்டும். அது இயலாத காரியம். அதனால் நண்பர்கள், மற்ற அமைப்பினர் ஆகியோரின் உதவியை நாடி, அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்தைப்பற்றி பேசுவதுதான் சிறந்தது என முடிவு செய்தேன்.
அப்படி பல இடங்களில் பேசி, முடிந்த வரை படைப்பாளிகளையும், மாணவர்களையும் ஈர்ததபின், இந்த சங்கமத்தின் ஐந்தாவது ஆண்டுவிழாவவை அடுத்த வருடம் விமரிசையாக கொண்டாடலாம் என்று முடிவெடுத்தேன்.
இந்த முடிவுகளை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, இந்த பயணைத்தை தொடர்வதற்காக, நான்காவது ஆண்டுவிழாவை மிக எளிமையான ஒரு கூட்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தான் நான் நினைத்த அதே தேதியில் திரு தம்பிசோழன் அவருடைய ஆக்டர்ஸ் ஸோன் சார்பில் நடக்கும் நான்காவது திரையிடலை நடத்த முடிவுசெய்து, என்னையும் அதில் பேச அழைத்தார்.
உண்மையிலேயே இது என்னைப் பொருத்தவரையில் பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான். அதனால் இந்த சந்தர்பத்தையே நான் என் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் புதிய பயணத்தின் ஆரம்பமாக நினைத்துக்கொண்டேன்.
அந்த ஒரு சந்தோஷத்துடன் தான் நான் அந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது. நிகழ்வை நடத்துபவரையும் அதில் பேச அழைத்தவர்களையும் தவிர்த்துப் பார்த்தால், வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கைவிரல்களின் எண்ணிக்கையைவிட குறைவுதான்.
திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்திய அனுபவம் இருப்பதால் இதை ஒரு ஆச்சரியமாக நான் பார்க்கவில்லை. காரணம் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வந்த சங்கமத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இருபதிற்கும் குறைவான நண்பர்கள் மட்டும் வந்த நிகழ்வையும் நான் நடத்தியிருக்கிறேன். அதுவும் பெரிய கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து நிகழ்வை நடத்தும்போதும் கூட.
இருந்தாலும் இப்படி ஒரு நல்ல படம் திரையிடப்படும் போது இவ்வளவுபேர் தான் வருவார்களா என்ற கேள்வி என்னை மேலும் சிந்திக்க வைத்தது.

நேற்றைய நிகழ்வின் அனுபவத்தால் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. அந்த முடிவையும், நேற்று நடந்த நிகழ்விற்காக எழுதிவைத்த “இலக்கியமும் நடிப்பும் - ஒரு தனியாவர்த்தனம்“ என்ற உரையையும் இதைத் தொடர்ந்து இங்கே பதிவுசெய்கிறேன். 

Sunday 12 July 2015

செவ்வி 6 ல்



நேற்று நடந்த செவ்வியின் ஆறாவது நிகழ்வில் பிரான்சிஸ் இட்டிக்கோர மற்றும் லைம்லைட் ஆகிய இரண்டு மலையாள நாவல்களின் மொழிபெயர்ப்பு பற்றி பேசினார்கள். மிகவும் சந்தோஷம்.
அதைப்பற்றி அந்த மேடையிலேயே என்னுடைய சிறு கருத்து ஒன்றை சொல்ல விரும்பினேன். ஆனால், வழக்கம் போல தயக்கம் என்ற நோய் என்னை பேசவிடாமல் தடுத்தது. இருந்தாலும் அதை செல்லாமல் விடவும் மனம் வரவில்லை. அதனால் என் மனதில் தோன்றியதை இங்கே எழுதிட முடிவு செய்தேன்.
லைம்லைட் நாவலைப்பற்றி யுவகிருஷ்ணா பேசும்போது மலையாள சினிமா உலகத்தின் தற்பொழுதைய நிலைமை, தமிழ் அல்லது மற்ற திரை உலகங்களைப்போலத்தான் இருக்கிறது, சொல்லும்படியான மாறுபாடுகள் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை என்று கூறினார்.
இட்டிக்கோரா நாவரைப்பற்றி அபிலாஷ் பேசும்போது மலையாள இலக்கிய உலகத்தில் பின்நவீனத்துவம் கால்பதிக்கவில்லை என்றும், அதனால் சாருவின் தாக்கத்தால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றும், இது ஆரம்பம் என்பதால்தான் அங்கு இந்த நாவல் பெருவெற்றி பெற்றிருக்கிறது என்றும் சொன்னார்.
வினாயக முருகனும் அதை வழிமொழிவது போலவே பேசினார்.
சந்திரா மட்டும் அதற்கு சற்று மாறாக பேசினார். அவர் இந்த நவீனம், பின் நவீனம் போன்றவற்றை விட்டுவிட்டு நாவலின் உள்ளடக்கத்தை (இதுதான் விரிவாகன உரையா அல்லது சுருக்கமானதா என்று எனக்கு புரியவில்லை) பேசினார். பாலியல் வன்மம் என்பது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கலையல்ல என்பதையும் எடுத்துரைத்தார்!
கேரளத்தில் பிறந்து வளர்ந்து, இங்கு வந்து வாழும் எனக்கு இவற்றையெல்லாம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. காரணம், மலையாளத்தில் கூட இந்த நாவல்களைப்பற்றி இந்த அளவுக்கு விவாதித்து நிகழ்வுகள் நடந்ததாக தெரியவில்லை. அதற்காக விஜய் மகேந்திரனுக்கும், வினாயக முருகனுக்கும் பாராட்டுக்கள்.
நான் சொல்ல வரும் விஷயம் இந்த இரண்டு நாவல்களுக்கும் பொதுவான ஒரு கருத்தை மட்டும்தான்.
மிகவும் கல்வியறிவு பெற்ற மாநிலம், பொருளாதாரத்திலும், இலக்கியத்திலும், அதுபோல எல்லா விஷயங்களிலும் மிகவும் வளர்ந்த மாநிலம், இப்படி கேரளத்தை பல அடிப்படைகளிலும் புகழலாம். அதில் உண்மையும் இருக்கிறது. (அதே நேரத்தில் கேரளம் பைத்தயக்காரர்களின் கூடாரம் என்று விவேகானந்தர் சொன்னதையும் மறக்கக்கூடாது!)
சமூகம் என்பது தனிமனிதர்களின் கூட்டம் தானே. அதனால் தனிமனிதர்களைப்போலவே சமூகத்தின் பொதுபுத்தியிலும் சில குணாதிசயங்கள் இருக்கத்தானே செய்யும். பொதுவாகவே எந்த ஒரு மனிதனும் முற்றிலும் நல்லவனும் அல்ல, முற்றிலும் கெட்டவனும் அல்ல. எல்லோருடைய புத்தியிலும் அன்பு, அறிவு, விவேகம், கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்களுடன் வக்கிரம், காமம் போன்ற கெட்டகுணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றின் விகிதாச்சாரம்தான் வேறுபடும். ஒவ்வொருவரும் மற்றவற்றை கட்டுப்படுத்தி ஒரு சில குணங்களை மட்டும் வெளிக்காட்டுவதனால் தான்  அவன் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.
இது சமூகத்திற்கும் பொருந்தும். ஒரு தனி மனிதன், தனியாக இருக்கும் போது, யாரும் அவனை கண்டுகொள்ளாமல் இருக்கும் போது, அப்படி யாரும் தன்னை பார்க்கும் வாய்ப்பே இல்லை என்று அவனுக்கு நன்றாக தெரியும் நேரங்களில் அவனிடம் ஒரு கம்ப்யூட்டர் (இணையதள இணைப்புடன்) இருந்தால் அவன் இணையத்தில் எதை தேடிப்பார்ப்பான் என்று யோசித்துப்பாருங்கள்!   
காமம், வக்கிரம் போன்றவையெல்லாம் தானாக வெளிப்படும். சிலவருடங்களுக்கு முன்னால்வரை பரங்கிமலை தியேட்டரில் ஷக்கீலா, ரேஷ்மா படங்களுக்கு கூட்டம் அலைமோதுவதற்கும், அதற்கு முந்தைய காலங்களில்  ஜெயபாரதி, சீமா படங்களுக்கு கூட்டம் அலைமோதியதற்கும், அதற்கு இணையாகவே அன்று முதல் இன்று வரை ஆங்கில மொழி தெரியாத கிராமங்களில் கூட ஆங்கிலப்படங்கள் (பயர் போன்ற இந்தியப் படங்களும்தான்) திரையிட்டு வெற்றிபெற்றதற்கும் காரணம் இதுதான்.
கேரளத்திலும் இதற்கு மாற்றம் ஒன்றும் இல்லை. அவர்களும் இந்தியர்கள் தானே!
இந்தியத் திரை உலகிலும் உலகத் திரையரங்கிலும் மலையாள சினிமா கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த காலகட்டத்தில், செம்மீன், சுயம்வரம், கொடியேற்றம் போன்ற படங்கள் வெளிவந்த காலத்தில்தான் இதா இவிடே வரே, ரதிநிர்வேதம், அவளுடெ ராவுகள் போன்ற படங்களும் அதற்கு இணையாகவே சத்திரத்தில் ஒரு ராத்திரி போன்ற படங்களும் வெளிவந்து வெற்றிபெற்றன.
அதே போல மம்முட்டி, மோகன்லால், சத்யன் அந்திக்காடு, சித்திக் லால் போன்றவர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் ஷக்கீலா, ரேஷமா ஆகியோரது படங்களும் அவர்களுக்கு சவாலாக இருந்து வந்தன.
இது காலம் காலமாக தொடர்ந்து வருவதுதான். ஆனால் அதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு மலையாள சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயபாரதி ரசிகர்களாக இருந்தார்கள் என்றோ, ஷக்கீலா ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றோ சொல்வது சரியல்ல.
அதே நிலைதான் இலக்கியத்திலும். மலையாளத்தில் சாருவின் கதைகள் போன்ற பல கதைகள் வருடங்களுக்கு முன்பே வெளிவந்திருக்கின்றன. (நானும் கூட சிறுவயதிலேயே படித்திருக்கிறேன்). அந்த வயதின் ஆர்வத்தில் படித்திருந்தாலும், அதை படிப்பதை யாராவது பார்த்தால் நம்மை தரக்குறைவாக பார்ப்பார்களோ என்ற எண்ணத்தில் காலப்போக்கில் எல்லோரும் அவற்றை படிப்பதை விட்டுவிட்டனர். வயது முதிர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதனால்தான் அதுபோன்ற புத்தகங்கள் பிரபலமடையாமல் போயின. (அபிலாஷ் சொன்னது போல மலையாளிகள் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகின்றனர் என்பதும் இதற்கான ஒரு முக்கிய காரணம்தான்.)
இருந்தாலும் அவ்வப்போது, இதுபோன்ற படங்களும் புத்தகங்களும் ஒரளவு கட்டமைப்புடனும், தரத்துடனும் வெளிவருவதும் வெற்றி பெறுவதும் இயற்கைதான். அப்படி வெற்றி பெற்ற புத்தகங்கள்தான் இந்த இரண்டு புத்தகங்களும்.
அதனால் இந்த இரண்டு புத்தகங்களை வைத்துக்கொண்டு தற்போதைய மலையாள சினிமா மற்றும் இலக்கியச் சூழலை மதிப்பிடுவது சரியாகாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

பி.கு. – உலகில் வெற்றி பெற்றவர்களை விட வெற்றிபெறாதவர்கள்தான் “வெற்றிபெறுவது எப்படி“ என்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதுபோல சினிமாவைப்பற்றியும் உண்மையில் கடை நிலையிலிருந்து வளர்ந்து வந்த யாரும் எழுதியதாக தெரியவில்லை.
சோகன்லாலும் திரைத்துறைக்கு மேல் மாடிவழியாக நுழைந்து தன்னால் இயன்ற வெற்றியை பார்த்தவர் தான். அவர் இயக்குநர் என்பதனாலேயே சினிமாவைப்பற்றி முழுமையாக சொன்னார் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

அவர் பிரபல எழுத்தாள் மாதவிக்குட்டியின் (கமலா சுரய்யா அல்லது கமலாதாஸ்) மகன். அவர் திரைத்துறைக்கு எப்படி வந்திருப்பார், ஒரு எழுத்தாளரின் மகனுக்கு ஆரம்பத்தில், அதுவும் மலையாளத்தில்,  எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். தாயைப்போலவே அவருக்கும் எழுத்தாற்றல் இருக்கிறது. அதனால் இப்படி ஒரு புனைவை எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். அதில் சில சிறு உண்மைகள் இருந்தாலும், அதை புனைவாக மட்டுமே எடுத்துக்கொள்வதுதான் மிகவும் சிறந்தது.     

Tuesday 7 July 2015

பஷீர் – நினைவுகளில்



பஷீரின் படைப்புகளைப் பற்றி சொல்வதென்றால் எவ்வளவு வேண்டுமென்றாலும் சொல்லலாம். இருந்தாலும் தற்பொழுது நான் அவருடைய படைப்புகளுக்கு வெளியே இருக்கும் பஷீரைப்பற்றித் தான் சில குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன்.
உண்மையைச் சொன்னால் தன்னுடைய படைப்புகளில் காணும் பஷீரையும் நிஜவாழ்க்கையில் இருந்த பஷீரையும் பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அவருடைய எழுத்துக்களில் உள்ள நகைச்சுவையும் மனிதாபிமானமும் மற்ற குணங்கள் அனைத்தும் அவருடைய சொந்த குணநலங்கள்தான் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் வராது.
இப்படி தன்னுடைய வாழ்வையும், வாழ்வில் நடந்த சம்பவங்களையும், பார்த்த மனிதர்களையும், அவர்களின் எண்ணங்களையும் இந்த அளவுக்கு யதார்த்தமாக, தனக்கே உரித்தான மொழியில், கள்ளம் கபடமில்லாத, நாடகத்தனமோ இலக்கியத்தனமோ கலந்திடாத, இயல்பான மொழியில் படைத்துக் காட்டிய இன்னொரு கலைஞன் உலகில் இருந்திருக்கிறானா அல்லது இருக்கிறானா என்று எனக்குத் தெரியவில்லை!
பஷீரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவருடைய படைப்புகளில் காண்பது போலவே இருப்பதுதான் மிகச்சிறப்பு. பேரிலக்கியங்கள் படைத்த எழுத்தாளர்களிடம் பேசினாலும், பிச்சைக்காரர்களிடம் பேசினாலும், குழந்தைகளிடம் பேசினாலும் அதே மொழிநடைதான்.
அதற்கான சில உதாரணங்களைப் பாருங்கள்.
‘பாத்தும்மாவின் ஆட்டி’ற்கு முன்னுரை எழுதும்போது அவர் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.
பாத்தும்மாவின் ஆடு, என்ற உண்மையான கதையை எழுதிய நபர் அஞ்ஞானியான, திருமணம் ஆகாத ஒருவன் தான். (திருமணம் ஆகாதவர்களில் ஞானிகள் இல்லை.) இந்த முன்னுரை எழுதுபவர் ஞானியான ஒரு கணவன் தான். (மனைவியர் வாழ்க!). வேறு விசேஷங்கள் ஒன்றும் இல்லை…”
1959-ல் இந்த புத்தகம் வெளிவரும்போது எழுதிய முன்னுரையின் ஆரம்பம்தான் இது.
அந்த முன்னுரையில் இன்னொரு இடத்தில் வரும் சில வரிகளைப் பாருங்கள்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்திநாலு ஏப்ரல் இருபத்தியேழாம் தேதி எழுதி முடித்தது தான் இந்த ‘பாத்தும்மாவின் ஆடு’ என்ற இந்தக் கதை. இதை ஒரு முறை நகலெடுத்து இன்னும் அழகாக, ஒரு முன்னுரையுடன் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். நாளை, நாளை என்று நாட்கள் கடந்து சென்றது.
ஐந்து வருடங்கள்!
இது வரையிலும் இந்தக் கதை நகலெடுக்கவில்லை. இதற்கு முன்பு வெளியிட்ட எல்லா புத்தகங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தவும் நகலெடுக்கவும் அழகுபடுத்தவும் செய்தவைதான்…”
இதை படிக்கும்போது அவருடைய அயராத உழைப்பையும் சிரத்தையையும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு உதவியாளர் என்று யாரும் இருந்ததில்லை. எழுதுவதில் உதவி செய்ய மற்றவர்கள் தயாராக இருந்தாலும் அப்படி உதவியாளர்களைக் கொண்டு எழுத வைப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அவரேதான் எழுதுவார். திருத்துவார். பலமுறை திருத்தி நகலெடுத்து, மீண்டும் திருத்தி அவர் மனதில் திருப்தி ஏற்பட்டபின்புதான் வெளியிடுவதற்காக கொடுப்பார்.
(இந்தக்கால எழுத்தாளர்கள் பற்றி தெரிந்தால்தான் அவருடைய அந்த கடின உழைப்பின் மகத்துவம் புரியும்). அப்படி ஒவ்வொரு வார்த்தையையும் சிற்பம் போல் செதுக்கியதனால் தான் அவருடைய படைப்புகள் என்றும் சாகா வரம் பெற்று நிற்கின்றன.
பஷீரின் வாழ்வில் இரு முறை பைத்தியம் பிடித்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வேளையிலும் அவருடைய செயல்பாடுகளிலோ, படைப்புத்திறனிலோ எந்த ஒரு மாற்றமும் இருந்ததில்லை. அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அந்நேரம் அந்த ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளிடம் மிகவும் நட்புடன்தான் பழகி வந்தார். அவர்களிடமும் அவருடைய பேச்சு ஒரேபோல் தான் இருந்தது.
அதைப்பற்றியும் அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
”…. இப்படிப்பட்ட கடுமையான சிகிச்சையின் மத்தியில் தான் நான் இந்த பாத்தும்மாவின் ஆடு என்ற இந்த நகைச்சுவை கதையை எழுதுகிறேன். ஒரு மணிநேரம் எழுதி சோர்ந்து போகும்போது, நான் பைத்தியக்காரர்களின் அருகில் செல்வேன். சில இன்டர்வ்யூக்கள் எல்லாம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்…”
சில பைத்தியக்காரர்களைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார். அதில் ஒன்று..
இவர் சுத்த மௌனி. ஜாதியில் கிறுஸ்துவர். கத்தோலிக்கன் என்று நினைக்கிறேன். வெகு நாட்கள் முயற்சி செய்தபின்தான் அவர் என்னிடம் பேசினார். வழக்கமாக நாலுமணிக்கு பிறகான சிகிச்சையெல்லாம் முடிந்தபின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு வராந்தாவிற்குச் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து இரண்டு சிரி சிரிப்பார்! பிறகு ஒரு பீடியை பற்றவைத்து புகை விட்டபடி இந்தப்பக்கம் வருவார். நாங்கள் நண்பர்கள் ஆனதும் அவருடைய வாழ்க்கை ரகசியத்தை அவர் என்னிடம் சொன்னார். நான் கேட்டேன், என்ன வேலையில இருந்தீங்க.
அவர் சொன்னார், ‘பட்டாளத்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் சிரியாவில் இருக்கையில் செத்து மண்ணோடு மண்ணாகிவிட்டேன்.’
நான் கேட்டேன், ‘பிறகு?’
அவர் சொன்னார், ‘இப்போ கடவுள் பூமிக்கு என்னை அனுப்பியிருக்கிறார்.’
எந்த பிரத்யேக வேலைக்காக என்று நான் கேட்கவில்லை.
இன்னொரு குண்டு பைத்தியக்காரனுக்கு வாழ்வில் ஒரே ஒரு லட்சியம் தான் இருக்கிறது, ஒரு யானையை சாப்பிட வேண்டும்!
நான் சொன்னேன், ‘எங்குப்பாப்பாவுக்கு ஒரு யானை இருந்துச்சு!’
அவன் கேட்டான், ‘அப்புறம் அதை சாப்பிட்டீங்களா?’
நான் சென்னேன், ‘சாப்பிடல, வெளியில எல்லாம் சுத்திக்கிட்டிருக்கான்.’
அவன் கேட்டான், ‘புடிக்க முடியுமா?’
நான் சொன்னேன், ‘தெரியாது.’
….
இப்படி பல நகைச்சுவைகளும் எழுதுவதற்கு இருக்கு. ‘பஷீருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, எங்களுக்கு ஏன் வரலை?’ என்று சில இலக்கியவாதிகள் புலம்புவதைக் கேட்டேன். வருத்தப்பட்டு ஒரு பலனுமில்லை. யோக்கியர்களுக்கு தான் அதெல்லாம் வரும்!...”
இப்படி எழுத பஷீரைத்தவிர யாரால் முடியும். இதே பாத்தும்மாவின் ஆடு’ மறு பதிப்பிற்காக 1981ல் எழுதிய முன்னுரையில் வேறொரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.
அந்த நேரத்தில் அவர் குடும்பத்துடன் பேப்பூரில் வசிக்க ஆரம்பித்திருந்தார். அந்த புதிய இடத்து வாழ்க்கையைப்பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
”… நாங்கள் இங்கே ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறோம். நல்லபாம்புகள், சாரைகள், கருந்தேள்கள்- இவை தினமும் வருபவர்களல்ல. நரிகள் தினமும் வருவார்கள். நண்பர்கள் தான். மாலை நேரத்தில் பத்தறுபது நரிகள் கேட்டுக்கு முன்னால் வந்து நின்று என்னை நோக்கி எனக்கு ஏதோ உதவி செய்வது போல பெரும் சத்தத்துடன் ‘கூ.. கூ..’வென கூவ ஆரம்பிப்பார்கள். நான் உறக்க திட்டுவேன்.
..ப்பசங்களா, போதும். வெட்கமில்லையா உங்களுக்கு இப்படி உரக்க கூச்சல் போடறதுக்கு.’
அப்போது நரிகள் வெட்கப்பட்டு பேசாமல் ஓடிப்போய்விடுவார்கள். நரிகள் இந்த வீட்டில் இருக்கும் கோழிகளை சில நடு இரவுகளில் கடித்து துக்கிக்கொண்டு போய் சாப்பிடும். நான் கவலைப்படமாட்டேன். கோழிகள் என்னுடைய மனைவியின் சொந்தம் தான். முட்டைகள் எனளக்கு அப்படி வழக்கமாக ஒன்றும் கிடைப்பதில்லை
இப்படி முன்னுரை எழுதும் பஷீரின் நகைச்சுவை உணர்வைப்பற்றி, அதை அனுபவித்து தெரிநதுகொண்ட பிரபல கவிஞர் ஓ.என்.வி. குறுப்பு வியந்து வியந்து சொல்கிறார்.
ஒரு முறை எர்ணாகுளத்தில் பஷீர் நடத்தி வந்த புத்தகக் கடையின் முன்பாக ஓ.என்.வி.குறுப்பும் தோழர் கே.தாமோதரனும் நடந்து வந்து கொண்டிருந்தனர். ஏதோ அத்தியாவசிய விஷயம் சொல்ல இருக்கிறது என்பது போல கடையிலிருந்த பஷீர் சாலையில் இறங்கி நின்று கைதட்டி அழைத்தார். இவர்கள் கடைக்குள் சென்றனர். அவசரத்தில் தான் கேள்வி எழுந்தது. ”பிக்காசோவின் அட்ரஸ் வேணும், உடனே வேணும்.” தோழர் தாமோதரன் தனக்குத்தானே சொல்வதுபோல மேலே பார்த்து பிக்காசோ இப்போது எங்கே இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தார். குறுப்பு கேட்டார், ”அவ்வளவு அத்தியாவசியம் என்னவோ?”
பஷீர்- ”இங்கே நான் ஒரு புதிய ஷெல்ப் செஞ்சிருக்கேன்ஒரு பெரிய ஷெல்பை சுட்டிக்காட்டி சொன்னார், ”அதை பெயின்ட் பண்ணணும்.”
என்றுமே சிரிக்காத தாமோதரன் கூட இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம். சிரிக்காமல் என்னதான் செய்வது!
பஷீரின் முகத்தில் மிகுந்த கவுரவம் தோன்ற ஆரம்பித்தால் உடனே ஒரு வெடிச்சிரிப்பு தரும் எதையோ சொல்லப்போகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அந்த சமயத்தில் தான் ஒ.என்.வி.குறுப்பின் திருமணம் நடந்தது. புத்தகங்களை நேசிக்கும் குறிப்பிற்கு பஷீர் ஒரு புத்தகத்தைத் தான் பரிசாக வழங்கினார். அதில் அவர் எழுதி கையெழுத்திட்டது இப்படித்தான்.
குறுப்பின் மனைவிக்கு,- ஆரம்ப கட்ட சிரிப்பும் சந்தோஷமும் கொஞ்சலும் எல்லாம் முடிந்து ஓ.என்.வி. அடிக்கவும் உபத்ரவம் பண்ணவும் ஆரம்பிக்கும்போது வாசித்து சிரிக்க..”
சில நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்புதான் அந்த புத்தகம். ஆனால் அந்த தொகுப்பில் இருந்த எந்த நகைச்சுவையையும் விட பெரிய நகைச்சுவைதான் இந்த குறிப்பில் இருந்தது.
ஒரு முறை மதிலுகள் கதையை படமாக்குவதற்கான அனுமதியை வாங்க அடூர் கோபாலகிருஷ்ணன் தன் நண்பர் டாக்டர் பஷீருடன் நம் பஷீரை சந்திக்க சென்றிருக்கிறார்.
அவர்களிடம் பஷீர் கேட்ட முதல் கேள்வி இதுதான். ”நாரயணியின் பாத்திரத்தில் யார் நடிக்கிறார்
கேள்வி சட்டென வந்ததால் அடூர் சற்று பதட்டப்பட்டார்.
அந்த ரோளில் யாரும் நடிப்பதில்லை. கதையில் இருப்பது போலவே சப்தம் மட்டும் தான் இருக்கும்.” அடூர் விளக்கினார்.
அப்படியென்றால் படம் நன்றாக வரும்சிறு புன்னகையுடன் பஷீர் தன் கருத்தை அப்போதே சொன்னார்.
காரணம் அந்த கதையை படமாக்க பலரும் பஷீரை அனுகியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் நாரயணியின் பாத்திரத்தில் பல நடிகைகளையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அதனாலேயே பஷீர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அப்படியாக அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு மதிலுகள் படமாக்க அனுமதி கிடைத்தது. பிறகு அடூர் அந்த படத்தை எடுத்து முடித்தபின், முதல் காட்சியை பஷீர் தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே எம்.டி.யின் உதவியுடன் முதல் காட்சிக்கு அவரை வரவழைத்தார்கள்.
காட்சி முடிந்த பின் திரையரங்கில் விளக்குகள் எரிந்தது. எல்லோரும் எழுந்தனர். பஷீர் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தார். படத்தைப் பார்த்து பஷீர் என்ன சொல்வாரோ என்று அனைவரும். குறிப்பாக அடூர் பதட்டத்துடன் இருந்தார். அடூர் அவர் பக்கத்தில் சென்றார். பஷீர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். கண்கள் நிறைந்திருந்தது. சில நிமிட மௌனத்திற்கு பிறகு மெதுவாகச் சொன்னார். ”நாட் ஏ டல் மோமன்ட்.”
அடூர் மனதில் நினைத்தார். தப்பித்தேன்.”
ஆனால் அதைப்பற்றிய பஷீரின் முழு மதிப்பீட்டையும் மனிதாபிமானத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு பின்னாளில் நடந்தது.
சில தயாரிப்பாளர்கள் பஷீரின் அனைத்து படைப்புகளையும் படமாகவோ, தொலைக்காட்சி தொடராகவோ எடுப்பதற்கான அனுமதியை பெற பஷீரை அனுகியிருக்கிறார்கள். எல்லாம் பேசி முடிக்க ஆரம்பிக்கும்போது பஷீர் சொல்லியிருக்கிறார், ”கொஞ்சம் நில்லுங்க, ‘பாத்தும்மாவின் ஆடு’ விஷயத்திலயும் ‘எங்குப்பாவிற்கு ஒரு யானையிருந்துச்சு’  விஷயத்திலயும் நான் ஒருத்தர் கிட்ட கேட்க வேண்டியிருக்கு.”
அதற்கு அவர் ரைட்ஸ் கேட்டிருக்காரா?”
இல்லை, இருந்தாலும் கோபாலகிருஷ்ணன் கிட்ட கேக்கணும். என்ன சொல்றீங்க
இதுதான் பஷீர்.
அவரைப்பற்றி சொல்வதானால் அதுவே ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கிறது. இருந்தாலும் நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
நன்றி.

வணக்கம்.