Monday 22 April 2013

வணக்கம்


நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்பொழுது நான் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். இதற்கு மத்தியில் நான் வலைப்பதிவு, முகநூல் மற்றும் பல வலைதளங்களில் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் அவை எதுவுமே என்னை ஈர்க்கவில்லை. அதனால் என்னால் அவற்றில் கூடுதலாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. என்னை தொடர்ந்து செயல்படவைக்க பல மாற்றுப்பாதைகளை யோசித்துப்பார்த்தேன்.
     என்னுடைய முதன்மையான பணி என்பதால் திரைக்கதைகள் எழுதவேண்டியிருந்தது. தற்பொழுது நான் என்னுடைய முதல்படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். இந்த வேலைகளுக்கு இணையாகவே கடந்த இரண்டு வருடங்களில் பத்துமுறை திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நடத்திவந்துள்ளேன். இச்சங்கமத்தை மேலும் பயனுள்ளதாக வளர்க்கவும் இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும்தான் நான் இந்த வலைதளத்தை ஆரமபித்து திரும்பவும் எழுத ஆரம்பித்துள்ளேன்.
நீண்டநாள் இடைவெளி விட்டதனாலும் கடந்த சிலவருடங்களாக சோம்பேறித்தனம் என்னை ஆட்கொண்டதனாலும் என்னால் பழையதுபோல வேகமாக எழுத முடியவில்லை. அதனால் வரும் நாடகளில் படிப்படியாக நான் விரிவாக எழுதுவேன். கூடிய விரைவில் நான் என் பழையவேகத்தை எட்டிவிடுவேன் என்று நம்புகிறேன்.
உண்மையில் நான் இந்த வலைதளத்தை இந்தமாதம் முதல் வாரத்திலேயே ஆரம்பித்தேன். இதை ஆரம்பிக்க போகும்போது வழியில் அகரமுதல்வனை சந்தித்தேன். அவர் தன்னுடைய புதிய புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தில் பங்குபெற அழைப்பு விடுத்தார். அதனால் அவருடைய புத்தகத்தைப்பற்றி எழுதியபடி என்னுடைய எழுத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்தேன். ஒருசிலகாரணங்களால் அந்த நிகழ்வு ஒரு வாரகாலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் நான் என் முடிவை மாற்றவில்லை. அந்த நிகழ்விற்காக காத்திருந்தேன்.
நேற்று அந்த நிகழ்விற்கு சென்றுவந்து தற்பொழுது இங்கே எழுத ஆரம்பித்துள்ளேன். என்னுடைய நண்பர்களான நீங்கள் அனைவரும் தொடர்ந்து நான் எழுத உற்சாகமும் ஊக்கமும் தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
விஜயன்        

No comments:

Post a Comment

Let others know your opinions about this post