Monday 21 October 2013

காரல் மார்க்சின் கவிதைகள் – 8



பைத்தியக்காரி
-         ஒரு கதைப்பாடல்

நிலவில் ஒருவள் நடனம் ஆடுகிறாள்,
இருட்டில் நிழலாக மறைந்து போகிறாள்,
மேலாடையில் அடங்காத மார்பின் இரு
கண்கள் மின்னிஜொலிக்கிறது,
பாறையில் கொத்திவைத்த வைரங்கள்போல!

நீலக்கடலே! அருகில் வா நீ !
உனக்கு தருகிறேன் ஒரு நறுமுத்தம்!
செவ்விளநீர்பு+ தொடுத்த ஒரு
கிரிடமெனக்கு அணிவித்திடு நீ- ஹரி-
நீலநிறம் சோ;த்த ஒரு மேலாடை
எனக்கு நெசவு செய்துகொடு!

நல்ல தங்கமும் மாணிக்கச்செங்கல்லும்
கொண்டுவருகிறேன் நான்!
அதில் என் ரத்தமும் துடிக்கிறது, சிறு
சூடுதரும் தன்மார்பில் அன்பை அணிவித்து
கடலுக்குள்ளே கொண்டு செல்கிறேன்!

உனக்காக பாடுவேன் நான் !
அலையும் காற்றும் அதில் துள்ளும்!
குதித்து உயர்ந்திடும் நானும் நடனமாடும்
நேரத்தில் காற்றும் அலையும்
அழுத கண்ணீர் பெய்யட்டும்

ஒரு செவ்விளநீர்கிளையெடுத்து அவள்
மரகதநீல நிறங்கள் எழும் ஒரு
நாடாவை அதன்மேல் கட்டிய
சாதாரணமான ஒரு பார்வையும் பார்த்து
சோம்பல் கைகளிலிருந்தது வழுக்கி
விழுவதையறிந்து நிற்கிறேன்!

ஆழமான நீல இதயத்திற்கு அலை
ஒலியாகச்செல்ல சிறகை தா.
அம்மா, உனக்கு தெரியவில்லையா
நான் உன் மகனுக்கு தந்த பூவலங்காரம்?”

நீர்க்கடலை அவள் செவ்விளநீர்
ஒவ்வொன்றாய் போட்டலங்கரித்தாள்,
மாயமாம் நம்பிக்கையால் ஆகாதவிதம்!
முடியும்வரை பெருமையுடன் பைத்தியமாக

அவள் ஆடுகிறாள் ஒவ்வொரு இரவும்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post