Monday, 5 May 2014

என்னைப்பற்றி


புத்தகத்திற்குள் செல்வதற்கு முன்பு என்னைப்பற்றி சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். இங்கே அது தேவையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
நான் பிறந்தது தமிழ்நாட்டில்.  வளர்ந்தது கேரளாவில். சிறுவயதிலிருந்தே எனக்கு திரைப்படங்டகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்த விஷயத்தில் முக்கியமாக நான் என் தந்தைக்குதான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் கிராமத்திலுள்ள வாரச்சந்தைக்கு செல்வது வழக்கம். தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அனைவருக்கும் வியாழக்கிழமையின் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.
பொதுவாக தியேட்டர்களில் வெள்ளிக்கிழமை தான் புதிய படங்கள் திரையிட ஆரம்பிப்பார்கள். பட்டணம் மற்றும் நகரங்களில் உள்ள தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகும். கடந்த நூற்றாண்டில் பல படங்கள் தியேட்டர்களில் பலவாரங்கள் ஓடுவது வழக்கம். ஆனால் கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் படம் மாற்றப்படும். நாங்கள் வாழ்ந்தது தமிழ்நாடு, கேரள எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில்தான்.
எங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் சற்று பெரிய கிராமம் இருந்தது. (இருபது வருட வளர்ச்சிக்கு பிறகு, இன்று அதை நாம் ஒரு சிறு பட்டணம் என்று சொல்லலாம். அப்படியென்றால் அந்த கிராமத்தின் அன்றைய நிலை பற்றி புரிந்து கொள்ளலாம்.) அங்கு ஒரு தியேட்டர் இருக்கிறது. அங்கு வெள்ளிக்கிழமைகளில் புதியபடங்கள் திரையிட ஆரம்பிப்பார்கள். புதிய படங்கள் என்றால் ரிலீஸ் சென்டர்கள் மற்றும் சிறு டவுண்களிலிருந்து ஷிப்ட் செய்யப்பட்ட படங்கள். அதாவது சினிமா உலக மொழியில் சொன்னால் அது ஒரு சிசென்டர். வெள்ளிக்கிழமை திரையிட அரும்பித்த படம் திங்கள் கிழமை வரை மட்டுமே ஓடும். பிறகு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேறு பழைய படங்கள் திரையிடப்படும். அந்த தியேட்டரில் ஒரு வாரம் முழுவதும் ஒரு படம் ஓடினால் அது கண்டிப்பாக பட்டணங்களிலும் நகரங்களிலும் நூறுநாள் ஓடிய சூப்பர் ஹிட் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் எப்படியும் வியாழக்கிழமைகளில் எங்கள் கிராமத்து தியேட்டரில் திரையிடும் படங்கள் நல்ல படங்களாகவே இருக்கும்.  
என் தந்தைதான் இந்த கருத்தை எனக்கு சொல்லித்தந்தார். வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்கிய பிறகு அந்த தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது அவருடைய வழக்கம். என்னையும் அவர் படம் பார்க்க அழைத்து செல்வார். அவர்தான் எனக்கு கதை சொல்லும் கலையையும் திரைப்படம் பற்றிய மற்ற பல விஷயங்களையும் சொல்லித்தந்தார்.
நாங்கள் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள கோயமுத்தூர் மாவட்டத்தின் எல்லையோரம் இருந்ததால் எங்கள்தியேட்டரில் தமிழ் மற்றும் மலையாள படங்கள் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை திரையிட்டனர். பிறகு பழைய தமிழ் படங்கள் மற்றும் பிரபல ஆங்கில, ஹிந்தி படங்கள் செவ்வாய்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திரையிட்டு வந்தனர். அதனால் இந்த நான்கு மொழி படங்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு சிறுவயதிலிருந்தே கிடைத்தது.
நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு, பாலக்காடு பட்டணத்தில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இந்த பட்டணத்துக்கு, மாவட்ட தலைநகருக்கு திரைப்பட உலகை பொருத்தவறையில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. நான்கு மொழிகளில் வரும் புதியபடங்களும் இங்கே வெளியிடப்படும். எண்பதுகளில் நான் எனக்காக ஒரு சர்வே எடுத்து பார்த்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். பாலக்காட்டில் ஒரு படம் ஒரு வாரம் ஓடுவது சகஜம். ஒரு வேளை ஒரு படம் இரண்டாவது வாரம் ஓடினால் அது சென்னையில் நூறு நாள்படமாக இருக்கும். 
ஒரு படம் இருபத்தைந்து நாட்கள் பாலக்காட்டில் திரையிடப்பட்டால் சென்னையல் அது வெள்ளிவிழா(25 வாரங்கள்) படமாக இருக்கும். பாலக்காட்டில் இருபத்தைந்து நாட்கள் தான் வெள்ளிவிழாவாக இருந்தது. அங்கே உள்ள சில பிரபல திரையரங்குகளில் அப்படி இருபத்தைந்து நாட்கள் ஒடி வெள்ளிவிழா கண்ட படங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை இன்றும் காணலாம்.
பாலக்காட்டில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் பார்ப்பது என்னுடைய வழக்கம். நன்றாக படித்தால் படம் பார்ப்பதில் தவறிலலை என்று என் தந்தை அதற்கு அனுமதி அளித்திருந்தார். அந்த காலத்தில் நான் ஒரு நல்ல மாணவனாக இருந்தேன். அதனால் அப்பாவிடமிருந்து தடை வரவில்லை. அப்படி எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் முதல் பகுதியிலும் வெளியான அனைத்து படங்களையும் பார்த்தேன். அந்த காலம் தான் சினிமாவிற்கு குறிப்பாக தென்னகமொழி படங்களுக்கு பொற்காலம்!
அரவிந்தன், பரதன், பாலசந்தர், ராய், கட்டக் போன்றவர்களின் க்ளாஸ் படங்கள் முதல் ஐவி சசி, ஹரிஹரன், பாசில், எஸ்பி.முத்துராமன், பி.வாசு, மணிரத்னம், தாசரி, சுபாஷ்கை போன்றவர்களின் மாஸ் படங்களையும் பார்த்தேன்.
நான் சினிமாவின் தீவிர ரசிகன். அது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின மசாலா படமாக இருந்தாலும் சரி அடூர் கோபாலகிருஷ்ணனின் கலைப்படமாக இருந்தாலும் சரி ஒரே நாளில் பார்ப்பேன்.
எனக்கு கதை எழுதும் திறமை இருக்கிறது. ஆனால் திரைத்துறைபற்றி எதுவும் தெரியாது. அதனால் முதலில் நான் சென்னைக்கு வந்து ஒரு எழுத்தாளர்-இயக்குனர் ஆக வாய்ப்பு தேடினேன். சில பிரபலங்களை சந்தித்தேன். எழுத்தாளர் வாய்ப்பும் கிடைத்தது. அது சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிக எளிது என்று என்னை நினைக்க வைத்தது. அதனால் நான் திரும்பி சென்றுவிட்டேன். விரைவில் ஒரு தயாரிப்பாளர் இயக்குநராகவே வந்து விடலாம் என்ற முடிவுடன்! 
எல்லா சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் நடப்பது போல என் வாழ்க்கையிலும் பல திருப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்தது. நான் நினைத்தபடி பணம் சம்பாதிக்க என்னால் முடியவில்லை. என்னுடைய வியாபார வேலைகளில் அனைத்து வீழ்ச்சிகளுக்கும் சினிமா பார்க்கும் ஆர்வம் தான் காரணமானது. அதனால் அங்குள்ள வேலைகளை விட்டுவிட்டு 1996 ஜனவரி முதல் தேதி சென்னைக்கு திரும்பினேன். இந்த முறை வெற்றிபெறாமல் கிராமத்துக்கு திரும்புவதில்லை என்ற முடிவுடன் வந்தேன். தமிழ் படங்களில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். அதுவும் இந்த முறை மனைவி மக்களையும் உடன் அழைத்து வந்தேன். (இந்த இடைப்பட்ட காலத்தில் அது மட்டும்தான் என் வாழ்க்கையில் நேரத்திற்கு நடந்திருக்கிறது.)
ஒரு தெலைக்காட்சி தொடரிலும் பிறகு ஒரு படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. பிறகு துணை இயக்குநர், எழுத்தாளர். இணை இயக்குநர் படிப்படியாக வளர்ந்து விட்டேன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் வேலைசெய்தேன். ஆனால் அதிக நேரமும் கதைகளை எழுதி வைப்பதற்கும் குடும்பத்திற்காக சம்பாதிப்பதற்கும் செலவானது. அதற்காக மொழிபெயர்ப்பாளர், சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதுபவர் போன்ற பல பணிகளை செய்தேன். அதனால் ஒரு படத்தை இயக்கும்ட வாய்ப்பு மட்டும் இன்றுவிரை கிடைக்கவே இல்லை.
இதற்கிடையில் நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் (இதைப்பற்றிய விளக்கம் மறற தலைப்புகளில் இருக்கிறது) நிகழ்வை நடத்திவருகிறேன். தற்பொழுது என்னுடைய முதல் படத்தை தயாரித்து இயக்க ஆரம்பித்துள்ளேன்.

நான் என்னுடைய அனுபவங்கள் வாயிலாக இந்த பதினெட்டு வருடங்களல் கற்ற விஷயங்களை என் நண்பர்களும் பின்வருபவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். உண்மையில் திரைத்துறையில் வெறுமெனே வாழ்பவர்களுக்கு அல்ல, திரைப்படத்தில் வெற்றிபெற விரும்புவர்களுக்கும் திரைத்துறையில் இருப்பதற்காக எதையும் செய்ய துணிபவர்களுக்கும். இந்த கட்டுரைகள் அவர்களுக்கு ஒரு பாதையை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, 4 May 2014

About me


Before entering the subject I would like to tell something about me. I think it is needed here.
I was born in Tamilnadu and brought up in Kerala. From the childhood itself I was very much interested in films. I have to thank my father mainly for this. He used to go to the weekly market in our village every Thursday. All who seeing films in theatre will understand the importance of Thursdays.
Usually new films will be started to show in theatres from Friday. New releases will be shown in town and city theatres. And in the last century, many films ran for many weeks in those theatres. But in the villages, the films will be changed every week. We lived in a small village near by the border of Tamilnadu and Kerala.
There is a little bigger village, three kilometres away from our village. (Only after twenty years of development, now we can call it a small town. so you can understand the status of that village.) There is a theatre. New films will be shown there from Friday. But usually it will run only up to Monday only. And from Tuesday and to Thursday old films will be shown.  If a film runs for a full week in that theatre, it will be a super hit film, that run hundred days in towns and cities. Anyhow only good films will be shown in village theatres every Thursday.
My father told me about this strategy. And after completing the purchase from the weekly market every Thursday, he used to go to the theatre. And he used to bring me also to see the films. He taught me the story telling and other aspects of films.
As we were in Palakkad district in Kerala, sharing border with Coimbatore in Tamilnadu, Tamil or Malayalam films will be shown from Friday to Monday in ‘our’ theatre. And old Tamil films, popular English and Hindi films of that time will be shown from Tuesday to Thursday. So, I got chance to see all the four language films from the childhood itself.
After I joined in the college, I started to see films in Palakkad town. This town, district headquarters has an unique character related to the films. The new films from the four languages will be released in the theatres here. In eighties, I take a survey for myself and found that a film running in Palakkad (Palghat at that time) for one week was usual. If one film runs for second week, it will be a ‘hundred days’ film in Chennai.
If a film runs for twenty five days in Palakkad, it will be a silver jubilee film in Chennai (Twenty five weeks). In Palakkad twenty five days were silver jubilee! You can see the shields given for many silver jubilees like that, in the popular theatres even today.
I used to see all the released films in Palakkad. My father allowed to see them, provided I studied well. I was a good student at that time, so I had no objections from my father. Thus I saw most of the films in the eighties and the beginning of nineties. Of course it was the golden period of films, especially southern films!
I saw all the films starting from art films made by directors like Aravindan, Bharathan, Balachandar, Rai, Ghatak etc to the mass films directed by IV Sasi, Hariharan, Fazil, SP Muthuraman, P.Vasu, Manirathnam, Dasari, Subhash Gai etc.       
I am a hardcore fan of cinema, even it is either a commercial film of KS Gopalakrishnan or art film of Adoor Gopalakrishnan. And I have an ability to write stories. But I didn’t know anything about the industry practically. So, Initially I came to Chennai and tried to get chance to become a writer-director directly. I met some film personalities and I got a writer chance also. It made me think that getting chance in films is an easy task. So, I returned to village taking a decision to return to Chennai as a producer soon.
As usual for any common man, my life also had twists and turns and I couldn’t earn money as I thought. And cinema is the main reason for all my falls in business. So, I quit my works in the village and returned to Chennai on 1st January 1996. This time with a concrete decision to stay in the industry until got the success. I want to concentrate on Tamil films. And this time I came to Chennai with wife and children. (In the meantime that only happened in correct time in my life).
I got chance to work as an assistant director in a tv serial and then in a film. Then I got promotions step by step to associate director, writer, co-director etc. Meanwhile I worked in Malayalam, Tamil, Telugu and Kannada films. But most of the time I spent in writing many subjects and earning for family. For that also I worked in the industry, as a translator, censor script writer etc. So, I couldn’t get chance to direct film till date.
Meantime I started Film Literature Confluence (Details in the parallel posts about the confluences). Now I started to produce and direct my debut film.

I want to tell whatever I learned from my experience through these years to my friends and followers.   Really not to one who just live in cine field or like to win in cinema, but to one who love cinema and ready to anything, experiment and hard work to stay in film field. I hope these articles will be useful for them to find the right way.        

திரைப்படத் தயாரிப்பு 2014


நாம் ஒவ்வொருவரும் சினிமா பார்க்க ஆசைப்படுகிறோம். பலரும் திரையுலகைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்றனர். அனைவரும் நடிகர்களையும் கரைஞர்களையும் பின்பற்றவும், கிசுகிசுக்களை ரசிக்கவும் வேண்டி திரையுலகினர் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.
இதில் சிலர் திரைப்படங்களை உருவாக்க ஆசைப்படுகின்றனர். அதற்காக நடிகர்களாகவோ, தொழில் நுட்பக் கலைஞர்களாகவோ படைப்பாளிகளாகவோ திரைத்துறையில் நுழைகின்றனர்.
அதில் ஒரு சிலர் மட்டுமே திரைப்படம் எடுக்கும் முறை பற்றி உண்மையில் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதிலும் வெகுசிலர் மட்டுமே திரைப்படத் தயாரிப்பு மற்றும் வியாபாரம் பற்றிய நடைமுறை பிரச்சினைகளை அறிந்து வைத்துள்ளனர்.
திரைப்படத் தயாரிப்பின் நிலையை அடுத்த கட்டத்துக்கு வளர்த்து கொண்டுசெல்ல பல முன்னோடிகளும் அவர்கள் வழியில் பல முயற்சிக்களை செய்து வந்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் வரும் ஒரு புதிய முயற்சிதான் இந்ததயாரிப்பாளர்கள் கூட்டுத் தயாரிப்பு“.
இது திரைப்படத் தயாரிப்பை முறைப்படுத்தப்பட்ட, மேலும் லாபம்தரும் தொழிலாக மாற்றுவதற்கான ஓரு முயற்சி, இந்தத் திரைப்படம் கலைத்தரமும் வியாபார மதிப்பும் கொண்ட முழுமையான பொழுதுபோக்குச் சித்தரமாக இருக்கும்.  
இது ஓரு மாற்று வியாபார முதலீடாகவும் திரைத்துறைக்குச் செய்யும் ஓரு சேவையாகவும் இருக்கும், அதனால் இது லாபத்தை மட்டுமல்லாமல் மனத்திருப்தியையும் தரும்,
இந்த திட்டம் படைப்புத் திறனும் இலக்கிய அறிவும் கொண்ட பல தயாரிப்பாளர்களை நம் திறைத்துறையில் ஊருவாக்கி வளர்க்கும். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களுக்கு தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவும். புதிய தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தயாரிப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் இந்த திட்டம் ஓரு தளமாக இருக்கும்
நீங்கள்
படத் தயாரிப்பு பற்றி அறிந்துகொள்ள விரும்பினால்,,,
நல்ல, வெற்றிப் படங்களை தயாரிக்க விரும்பினால்,,,
திரைத்துறையில் ஏதாவது சாதிக்க விரும்பினால்,,,  அல்லது
நல்லதொரு பரிசோதனை முயற்சியில் ஓரு ஆங்கமாய் விளங்கிட,,,           இந்த தயாரிப்பாளர்கள் கூட்டுத் தயாரிப்பில் இணைந்திடலாம்.
 இந்த திட்டத்தைப்பற்றிய அனைத்து விபரங்களும் ஏற்கனவே எழுதி புத்தகமாகவே வெளியிட தயாராக உள்ளது. ஆனால் இதை அச்சிடுவதற்கு முன்பாக இந்த விபரங்களை நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். (குறைந்த பட்சம் அடுத்த பதிப்பை அச்சிடுவதற்கு முன்பு). அதனால் இந்த புத்தகத்தின் அத்தியாயங்களை இந்த வலைதளத்தில் பதிவுகளாக வெளியிடப்போகிறேன்.
திரைப்படம் பற்றி அறிந்துகொள்ள விரும்புவர்களும் திரைப்படம் எடுக்க விரும்புவர்களும் இதை படிக்க அழைக்கிறேன். கண்டிப்பாக இது உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை அச்சிட்டு வெளியிடும் முன் இதில் ஏதாவது திருத்தம், சேர்க்கை அல்லது மாற்றம் செய்ய உங்கள் அனைவருடைய அறிவுறைகளை வேண்டுகிறேன்.

Saturday, 3 May 2014

அறிவிப்பு

திரைப்படத் துறைக்கு செய்யும் ஒரு சேவையாகத்தான் நான் இந்த தளத்தில் திரைப்பட இலக்கியப் பெயர்காட்டியை தொகுப்பதையும் கட்டுரைகளை எழுதுவதையும் செய்கிறேன்.
இவற்றில் ஏதாவது தவறுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் முறையான அறிவுறைப்படி அவை திருத்தவோ, விலக்கவோ அல்லது மற்றவோ செய்யப்படும்.
இந்த பெயர்காட்டியும் குறிப்புகளும் அந்தந்த நபர்கள் அல்லது விஷயங்கள் பற்றிய அறிமுகமாக மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர்காட்டி மற்றும் கட்டுரைகளை பயன்படுத்தி யாராவது ஏதாவது தொடர்பு, உறவு அல்லது வியாபாரம் ஏற்படுத்திக்கொண்டால் எந்த வித்த்திலும் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.

இந்த தளத்திலுள்ள தொடர்பு எண்கள் மற்றும் குறிப்புகள் பற்றிய உண்மைத்தன்மை மற்றும் உரிமை பற்றி வாசகர்கள் தாங்களே பரிசோதித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

Film Production 2014



Hi friends,

Everyone likes to watch films. Most of them know about film industry. All want to know about film people to adore artistes, appreciate creators and enjoy gossips.
Some of them want to make films and enter the industry as actors, technicians or creators. A few among them only know really about film making. And a very few only know the practical problems of film making and marketing.
Many pioneers in the industry made innovative attempts to bring the status of the film making up to the nest level in their own ways. And here is an attempt in that series: that is Producers Group Production.
This is an attempt to make the film production more professional and profitable. This film will be a total entertainer with artistic quality and commercial value.
This will be an alternate business investment and a service to the film industry. So, it will give not only profit, but also satisfaction.
This venture will create and bring up many producers with creative power and literary knowledge in our industry. This project will be a platform for the experienced producers to share their experience to the new generation and for the new producers to learn the basics of film production.
If you would like
to know about film making..
to produce good and hit films…
to achieve something in film field… or
to be a part of a good experimental attempt…
You can join this Producers Group Production.
All the details about this project are already written as a book and ready to publish. But I want to share these details with all my friends before publishing the hard copies (At least before print the nest edition). So I am going to publish the chapters online now as posts in this blog.
I request all the film lovers who would like to know about film making and who would like to be part of film making to go through these chapters. I hope this will be useful to you all.

I request you to give your suggestions to correct, add or change the contents before send it to print.

Friday, 2 May 2014

Kural குறள் : 170

திருக்குறள் எளியகுறள்
THIRUKKURAL ELIYAKURAL

Paal(Section):           அறம்
ARAM  
VIRTUE

Part:                            இல்லறவியல்
Illaraviyal
Family Life

Chapter:                     17
அழுக்காறாமை
(அகத்தூய்மை)
Azhukkaaraamai
Avoiding Jealousy


Kural குறள் : 170


Kural குறள் : 169

திருக்குறள் எளியகுறள்
THIRUKKURAL ELIYAKURAL

Paal(Section):           அறம்
ARAM  
VIRTUE

Part:                            இல்லறவியல்
Illaraviyal
Family Life

Chapter:                     17
அழுக்காறாமை
(அகத்தூய்மை)
Azhukkaaraamai
Avoiding Jealousy


Kural குறள் : 169


Kural குறள் : 168

திருக்குறள் எளியகுறள்
THIRUKKURAL ELIYAKURAL

Paal(Section):           அறம்
ARAM  
VIRTUE

Part:                            இல்லறவியல்
Illaraviyal
Family Life

Chapter:                     17
அழுக்காறாமை
(அகத்தூய்மை)
Azhukkaaraamai
Avoiding Jealousy


Kural குறள் : 168


Kural குறள் : 167

திருக்குறள் எளியகுறள்
THIRUKKURAL ELIYAKURAL

Paal(Section):           அறம்
ARAM  
VIRTUE

Part:                            இல்லறவியல்
Illaraviyal
Family Life

Chapter:                     17
அழுக்காறாமை
(அகத்தூய்மை)
Azhukkaaraamai
Avoiding Jealousy


Kural குறள் : 167


Kural குறள் : 166

திருக்குறள் எளியகுறள்
THIRUKKURAL ELIYAKURAL

Paal(Section):           அறம்
ARAM  
VIRTUE

Part:                            இல்லறவியல்
Illaraviyal
Family Life

Chapter:                     17
அழுக்காறாமை
(அகத்தூய்மை)
Azhukkaaraamai
Avoiding Jealousy


Kural குறள் : 166